இந்தியப் பழங்குடிகள் From Wikipedia, the free encyclopedia
பளியர் தமிழ்நாட்டிலுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உயர்ந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் ஆவார். தென்னிந்தியாவின் மிகப் பழமையான சமூகங்களில் பளியர் சமூகமும் ஒன்று. இவர்கள் தமிழ் மொழியைப் பேசுகிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மேற்கு மலையின் சரிவிலும், தொடர்ந்து, தேனி மாவட்டம் வருசநாடு மலைப்பகுதிகளிலும் இவ்வினத்தினர் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளனர், மலைவாழ் இனங்களில் மிகப் பழங்குடியினர் இவர்களே. பழனியர் என்பதே பளியர் என மாறி வழங்குகிறது என்றும் சிலர் சொல்கின்றனர். இவர்களில் காட்டுப்பளியர், புதைப்பளியர் என்னும் இரு பிரிவினர் உள்ளனர். தேனடைகளை எடுக்கப் பயங்கரமான பாறைகளிலும் ஏறக் கூடிய திறனுடையவர்கள். விலங்குகளையும் பறவைகளையும் வேட்டையாடுவர். இவர்கள் காய், கனி, தேன், தானியங்களை உண்பது வழக்கம். மரங்களின் மீது பரண்களை அமைத்தும், பாறை இடுக்குகளிலும், குகைகளிலும் குடியிருப்பைக் கொண்டிருக்கிறார்கள். குட்டையான உருவம், சுருண்ட முடி, தடித்த உதடு, கருப்பு நிறம், குறைந்த ஆடை இவைகளைக் கொண்டு பளியர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இந்த இன மக்கள் குக்குருவான் பறவையை திட்டுவான் குருவி என்று அழைக்கிறார்கள். [1]
இந்த மக்களின் ஒரே பொழுதுபோக்கு இசை மட்டுமே. புல்லாங்குழல், சத்தக்குழல், கொம்பு, மேளம், மத்தளம், தப்பு, தமுக்கு உள்ளிட்ட பழமையான இசைக்கருவிகளும் அவை சார்ந்த ஆதி இசையும் இன்றளவும் இவர்களிடம் உயிர்ப்போடு உள்ளன. இந்த இசைக்கருவிகளை இவர்களே உருவாக்கி இசைக்கின்றனர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.