![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/be/Rama-Bharata-Paduka.jpg/640px-Rama-Bharata-Paduka.jpg&w=640&q=50)
பரதன் (இராமாயணம்)
இரமனின் தம்பி / From Wikipedia, the free encyclopedia
பரதன் (Bharata) வால்மீகி இயற்றிய இராமாயணக் காவிய நாயகன் இராமரின் தம்பிமார்களில் ஒருவர். மற்றவர்கள் இலக்குவன், சத்துருக்கனன் ஆவார். வட இந்தியாவில் உள்ள கோசல நாட்டு மன்னர் தசரதன் - கைகேயி இணையருக்குப் பிறந்தவர் பரதன். [2][3] பரதன் சீதையின் தங்கை மாண்டவியை மணந்தவர். பரதன் - மாண்டவி இணையருக்குப் பிறந்த குழந்தைகள் தக்சன் மற்றும் புஷ்கலன் ஆவர்.
விரைவான உண்மைகள் பரதன், தேவநாகரி ...
பரதன் | |
---|---|
![]() இராமரின் பாதுகைகளைக் கேட்கும் பரதன் | |
தேவநாகரி | भरत |
சகோதரன்/சகோதரி | இராமர், இலக்குவன், சத்துருக்கனன் (சகோதரர்கள்) சாந்தா (சகோதரி) |
குழந்தைகள் | தக்சன் புஷ்கலன்[1] |
அரசமரபு | ரகு வம்சம் (சூரிய வம்சம்) |
மூடு
தற்கால பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் தக்சன் தக்சசீலா நகரத்தையும், புஷ்கலன் புஷ்கலாவதி எனும் நகரத்தையும் நிறுவினர்.