From Wikipedia, the free encyclopedia
பத்மா சுப்ரமணியம் (பிறப்பு: 4 பிப்ரவரி 1943, சென்னை) தமிழ்நாட்டைச் சேர்ந்த பரத நாட்டியக் கலைஞர் ஆவார். பரதநாட்டியத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், எழுத்தாளர், ஆசிரியர் என பல துறைகளிலும் பங்களித்து வருகிறார். இவர் இந்தியாவைப் போன்றே உலக நாடுகளிலும் மிகப் பிரபலமானவர்.[1]
பத்மா சுப்பிரமணியம் | |
---|---|
தேசியம் | இந்தியா |
குடியுரிமை | இந்தியர் |
பணி | நடனம், நடன அமைப்பாளர், இசையமைப்பாளர், நடன ஆசிரியை, எழுத்தாளர் |
அறியப்படுவது | பரதநாட்டியம் |
சமயம் | இந்து |
பெற்றோர் | கே. சுப்பிரமணியம்-எஸ். டி. சுப்புலட்சுமி |
உறவினர்கள் | எஸ் வி இரமணன் (சகோதரர்) |
இவரது தந்தை கே. சுப்பிரமணியம், தாய் எஸ். டி. சுப்புலட்சுமி, சகோதரர் எஸ் வி இரமணன் ஆகியோர் தமிழ்த் திரைப்பட உலகைச் சேர்ந்தவர்கள். பத்மா, வழுவூர் பி. இராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றார்.
பத்மா இசையில் இளங்கலையும், மரபிசையியலில் (Ethno-Musicology) முதுகலைப் பட்டமும், நாட்டியத்தில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இவர் பரதம் குறித்து பல புத்தகங்கள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் பலவும் எழுதியுள்ளார். மேலும், கல்வி மற்றும் கலாச்சாரத்திற்கான இந்தியத் துணைக்கண்டக் குழுவில்(Indo-Sub-Commision) அதிகாரப்பூர்வமற்ற (Non-Official) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.