நெ. ஜனார்த்தன ரெட்டி
From Wikipedia, the free encyclopedia
நெடுமல்லி ஜனார்த்தன ரெட்டி (Nedurumalli Janardhana Reddy) (20 பிப்ரவரி 1935 - 9 மே 2014) ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் உறுப்பினரான இவர், இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவையில் விசாகப்பட்டினம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினார். 1990 முதல் 1992 வரை ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பணியாற்றினார். இவரது மனைவி நெடுமல்லி ராஜ்யலட்சுமி 2004 முதல் 2014 வரை ஆந்திரப் பிரதேச அரசில் அமைச்சராக இருந்தார்.
செப்டம்பர் 2007 இல், தீவிரவாத நக்சல் குழு உறுப்பினர்கள் ரெட்டியையும் இவரது மனைவியையும் படுகொலை செய்ய முயன்றனர்; இருவரும் காயமின்றி தப்பினர்.