![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f1/Juan_de_Juanes_002.jpg/640px-Juan_de_Juanes_002.jpg&w=640&q=50)
நற்கருணை
மகிழ்ச்சியாய் இருங்கள் / From Wikipedia, the free encyclopedia
நற்கருணை (Eucharist) கிறித்தவ சமயத்தில் ஆண்டவரின் திருவிருந்து, திருப்பீடத்தின் அருட்சாதனம், ஒன்றிப்பின் உணவு என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. நற்கருணை திருவிருந்து, இயேசு தனது இறுதி இரவுணவு வேளையில் வழங்கிய அறிவுரைகளுக்கு ஏற்ப கொண்டாடப்படுகிறது. இயேசுவின் சிலுவைப் பலியின் முன் அடையாளமாக உருவாக்கப்பட்ட நற்கருணை பலி, அவரது திருவிருந்தையும் கல்வாரித் தியாகத்தையும் நினைவுகூரும் வகையில் சிறப்பிக்கப்படுகிறது.[1] கத்தோலிக்க திருச்சபையின் வரையறையின்படி நற்கருணை என்பது கோதுமை அப்பம், திராட்சை இரசம் ஆகியவற்றின் குணங்களில் இயேசுவின் திருஉடலும், திருஇரத்தமும், ஆன்மாவும், கடவுள் தன்மையும் அடங்கியிருக்கும் அருட்சாதனம் ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f1/Juan_de_Juanes_002.jpg/640px-Juan_de_Juanes_002.jpg)