நந்தியால் மாவட்டம்
ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
நந்தியால் மாவட்டம் (Nandyal district) ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.[1] இதன் நிர்வாகத் தலைமையிடம் நந்தியால் நகரம் ஆகும். இம்மாவட்டம் கர்நூல் மாவட்டத்தின் நந்தியால் வருவாய் கோட்டம், துரோணாச்சலம் எனும் தோனே வருவாய் கோட்டம் மற்றும் அத்மக்கூர் வருவாய் கோட்டங்களின் பகுதிகளை கொண்டு 5 ஏப்ரல் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[2][3][4][5][6]
விரைவான உண்மைகள் நந்தியால் மாவட்டம், நாடு ...
நந்தியால் மாவட்டம் | |
---|---|
நாடு | ![]() |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
நிறுவப்பட்ட நாள் | 4 ஏப்ரல் 2022 |
தோற்றுவித்தவர் | ஆந்திரப் பிரதேச அரசு |
தலைமையிடம் | நந்தியால் |
நேர வலயம் | ஒசநே+05:30 (இந்திய சீர் நேரம்) |
இணையதளம் | https://nandyal.ap.gov.in/ |
மூடு
9,681 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாவட்டத்தின் மக்கள் தொகை 17.82 இலட்சம் ஆகும்.