தொல்காப்பியம் கண்ட தமிழியல்
From Wikipedia, the free encyclopedia
தொல்காப்பியம் தெளிவாகத் தெரியும் இடைச்செருகல் பகுதிகளை விட்டுவிட்டுப் பார்க்கையில் கி.மு. நான்காம் நூற்றாண்டில் தோன்றிய நூல் எனக் கண்டறிந்துள்ளனர். தொல்காப்பியம் தமிழ்மொழியை அறிவியல் கோணத்தில் அலசிப் பார்க்கும் ஓர் இலக்கண நூல். இலக்கணத்தை இக்காலத்தில் மொழியியல் எனக் கூறுகின்றனர்.
தொல்காப்பியம் தமிழ்மொழியை எழுத்து [1], எழுத்து தனித்தும் சேர்த்தும் சொல்லப்படும்போது ஒன்றைச் சுட்டும் சொல் [2], சொற்கள் தொடர்ந்து நின்று வாழ்வியலை உணர்த்தும் பொருள் [3] என மூன்று நிலைகளில் வகைப்படுத்திக்கொண்டுள்ளது.