தென்னிந்தியாவில் வெள்ளப்பெருக்கு (2015)
From Wikipedia, the free encyclopedia
2015 தென்னிந்திய மழை வெள்ளங்கள் என்பது நவம்பர்-திசம்பர் 2015 வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த பெருமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்குகளைக் குறிக்கும். இவ்வெள்ளப் பெருக்குகள், தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒன்றியப் பகுதியான புதுச்சேரியின் கோரமண்டலக் கரைப் பகுதிகளைப் பெரிதும் பாதித்தன. குறிப்பாக, சென்னை மற்றும் கடலூர் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.[2] ஏறத்தாழ 403 பேர் உயிர் இழந்துள்ளனர். 18 இலட்சம் மக்கள் இடம்பெயர நேரிட்டது. இவ்வெள்ளங்களால் ஏற்பட்டுள்ள சேதங்கள் இந்திய உரூபாய் மதிப்பில் 200 பில்லியனுக்கும் கூடுதலாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.
விரைவான உண்மைகள் நாள், அமைவிடம் ...
சென்னையில் மூழ்கிய நிலையில் காணப்படும் பாலங்கள் | |
நாள் | நவம்பர் 8, 2015 (2015-11-08) – நடப்பு நிகழ்வு |
---|---|
அமைவிடம் | தென்னிந்தியா (தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம்) |
இறப்புகள் | தமிழ்நாடு: 347 (approximate)[1] ஆந்திரப் பிரதேசம்: 54[1] புதுச்சேரி: 2 |
சொத்து சேதம் | இந்திய ரூபாய் 200 பில்லியனுக்கும் மேல்
ஆந்திரப் பிரதேசம்: ₹3,819 கோடி (US$478 மில்லியன்) புதுச்சேரி: ₹183.089 கோடி (US$23 மில்லியன்) |
மூடு