துளுவ நரச நாயக்கர்
From Wikipedia, the free encyclopedia
துளுவ நரச நாயக்கர் (கி.பி. 1491-1503) விஜயநகரப் பேரரசின் துளுவ மரபைத் தோற்றுவித்தவர். இவர் புகழ் பெற்ற கிருஷ்ணதேவராயரின் தந்தை ஆவார்.
விசயநகரப் பேரரசு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
நரச நாயக்கரின் தந்தையான துளுவ ஈஸ்வர நாயக்கர், சாளுவ நரசிம்மதேவ ராயரின் தளபதியாக இருந்தார். நரசிம்மதேவரின் மறைவுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த அவனது மூத்தமகனான திம்ம பூபாலன் குறுகிய காலத்திலேயே தளபதி ஒருவனால் கொல்லப்பட்டான். இதனைத் தொடர்ந்து சாளூவ நரசிம்மனின் இரண்டாவது மகனை இரண்டாம் நரசிம்மராயனாக துளுவ நரச நாயக்கர் அரியணை ஏற்றினார். இவன் வயதில் குறைந்த சிறுவனாக இருந்ததால், நரச நாயக்கர் ஆட்சிப் பொறுப்பைத் தானே நடத்திவந்தார். இக்காலம் விஜய நகரப் பேரரசின் சோதனைக் காலமாக விளங்கியது. உள்நாட்டிலும் குழப்பங்கள் மலிந்திருக்க வெளியிலிருந்தும் பேரரசுக்கு ஆபத்துக்கள் நிறைந்திருந்தன. எனினும், நரச நாயக்கர் திறமையாகப் பேரரசை நிர்வகித்தார்.
பஹ்மானி சுல்தான்களையும், கஜபதிகளையும் நாட்டை அணுகவொட்டாமல் வைத்திருந்தார். உள்ளூர்த் தலைவர்கள் பலரிடமிருந்து வந்த எதிர்ப்புக்களையும், பேரரசிலிருந்து விடுதலை பெற அவர்கள் எடுத்த முயற்சிகளையும் முறியடித்தார்.