திருச்சினாப்பள்ளி மாவட்டம்
சென்னை மாகாண மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
திருச்சினாப்பள்ளி ஜில்லா என்று அழைக்கபட்ட திருச்சிராப்பள்ளி மாவட்டம் என்பது பிரித்தானிய இந்தியாவின் முந்தைய சென்னை மாகாணத்தின் ஒரு மாவட்டமாகும். இது இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தற்போதைய திருச்சிராப்பள்ளி, கருர், அரியலூர் , பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையகமாக திருச்சிராப்பள்ளி நகரம் இருந்தது. இந்த மாவட்டம் 1907 இல் 2,632 சதுர மைல்கள் (6,820 km2) பரப்பளவு கொண்டதாக இருந்தது. இது வடக்கே தென் ஆற்காடு, மேற்கில் சேலம், மேற்கு மற்றும் வடமேற்கில் கோயம்புத்தூர், கிழக்கில் தஞ்சாவூர், தெற்கே மதுரை ஆகிய மாவட்டங்களால் சூழப்பட்டிருந்தது. புதுக்கோட்டை சமஸ்தானம் 1865 முதல் 1947 வரை திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் எல்லைக்குள் இருந்தது.
தென்னிந்தியாவில் மக்கள் வசிக்கும் பழமையான பகுதிகளில் திருச்சிராப்பள்ளியும் ஒன்றாகும். தொல்லியல் அகழ்வாராய்ச்சிகள் வழியாக கற்கால இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.[சான்று தேவை] இந்த மாவட்டத்தின் ஒரு பகுதியாக உள்ள உறையூர், முற்கால சோழர்களின் தலைநகர் ஆகும். திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இப்பகுதி மதராசு மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. மேலும் 1801 இல் ஒரு தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது. 1947 இல் இந்தியா விடுதலைபெற்ற பிறகு, திருச்சினாப்பள்ளி என்ற ஆங்கில மயமாக்கபட்டிருந்த பெயரானது திருச்சிராப்பள்ளி என்று மாற்றப்பட்டது.