தாளம் (பரதநாட்டியம்)
From Wikipedia, the free encyclopedia
தாளம் எனப்படுவது பாட்டின் காலப்பிரமானத்தை அனுசரித்து கைகளினாலோ அல்லது கருவிகளினாலோ தட்டுதல் ஆகும்.காலத்தை பிரித்து பாகுபாடு செய்ய தாளம் பயன்படுகிறது.இந்தப்பிரிவுகள் சீராகவும் கால அளவு முறையுடனும் அமைவது தாளத்தின் லயமாகும்.தாளம் எனும் சொல்லின் த என்ற எழுத்து சிவபெருமானையும் ள என்ற எழுத்து பார்வதியையும் குறிக்கும்.[1] ஆரம்பகாலத்தில் 108 தாளங்கள் உபயோகத்தில் இருந்தன.தற்போது சப்த தாளம் எனப்படுகின்ற ஏழுதாளங்களே உள்ளன.