தாரா சிக்கோ
From Wikipedia, the free encyclopedia
தாரா சிக்கோ (Dara Shukoh, தாரா ஷிக்கோ, பாரசீக மொழி: دارا شكوه , மார்ச் 20, 1615 – ஆகத்து 30, 1659) முகலாயப் பேரரசன் ஷாஜகானுக்கும் மும்தாஜ் மகாலுக்கும் பிறந்த மூத்த மகனும், முடிக்குரிய இளவரசரும் ஆவார். பாரசீக மொழியில் தாரா ஷிகோ என்றால் “புகழ் வாய்ந்தவன்” என்று பொருள். மன்னர் ஷாஜஹானும், உடன்பிறந்த ஜஹனாரா பேகமும் முகலாய ஆட்சிக்கு வாரிசாக தாரா சிக்கோவைத்தான் எண்ணியிருந்தார்கள். ஆனால், ஒரு கொடூரப் போருக்கு பின்னர், தாரா ஷிகோவை அவருடைய இளைய சகோதரர் அவுரங்கசீப் தோற்கடித்துக் கொலை செய்து ஆட்சிப் பொறுப்பினைக் கைப்பற்றினார்.[1][2][3].
விரைவான உண்மைகள் தாரா சிக்கோ Dara Shikoh, பிறப்பு ...
தாரா சிக்கோ Dara Shikoh | |
---|---|
முகலாய இளவரசன் | |
பிறப்பு | (1615-03-20)20 மார்ச்சு 1615 |
இறப்பு | 30 ஆகத்து 1659(1659-08-30) (அகவை 44) |
மரபு | திமுரிட் |
அரசமரபு | திமுரிட் |
தந்தை | ஷாஜகான் |
தாய் | மும்தாஜ் மகால் |
மதம் | இசுலாம் |
மூடு