![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fc/LotusDelhi.jpg/640px-LotusDelhi.jpg&w=640&q=50)
தாமரைக் கோயில்
From Wikipedia, the free encyclopedia
தாமரைக் கோயில் (Lotus temple) என்பது இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள பகாய் வழிபாட்டுத்தலம் ஆகும். அதன் தாமரை மலர் போன்ற வடிவத்தின் காரணமாக "தாமரைக் கோயில்" (கமல் மந்திர்) என அறியப்படுகிறது. இந்த பகாய் வழிபாட்டுத்தலம் தில்லியின் முக்கிய சுற்றுலாத்தலமாக உள்ளது. மற்ற அனைத்து பகாய் வழிபாட்டு இல்லங்களைப் போலவே, தாமரை கோயிலும் மதம் அல்லது வேறு எந்த தகுதியையும் பொருட்படுத்தாமல் அனைத்து மக்களுக்காகவும் திறக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில் தாமரை இதழ் போன்ற வடிவத்தில் தனித்தனியாக நிற்கும் 27 வெண் பளிங்குக் கற்களாலான அமைப்புகள் உள்ளன. இவை மூன்று சேர்ந்த ஒரு தொகுதியாக அடுக்கப்பட்டாற்போன்று ஒன்பது பக்கங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.[1] 1986 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இந்தத் தாமரைக்கோயிலில் சுமார் 40 மீட்டர் உயரம் கொண்ட ஒரு மத்திய மண்டபமும்[1] அதில் ஒன்பது கதவுகளும் பொருத்தப்பட்டுள்ளன. இம்மண்டபத்தில் ஒரே நேரத்தில் 1300 பேர் அமர்ந்து வழிபாடு செய்யலாம்.[2],[3] இது எண்ணற்ற கட்டடக்கலை விருதுகளை வென்றுள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான செய்தித்தாள் மற்றும் நாளிதழ் கட்டுரைகளில் தனித்தன்மையுடன் வெளிவந்துள்ளது.[4]
தாமரைக் கோயில் | |
---|---|
![]() தாமரைக் கோயில், டில்லி | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
வகை | வழிபாட்டு மாளிகை |
கட்டிடக்கலை பாணி | வெளிப்பாடுவாதி |
இடம் | புது தில்லி, இந்தியா |
நிறைவுற்றது | 1986 |
திறக்கப்பட்டது | டிசம்பர், 1986 |
தொழில்நுட்ப விபரங்கள் | |
அமைப்பு முறை | கான்கிரீட் சட்டம் & முன் வடிவமைக்கப்பட்ட கான்கிரீட் கூரை |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | பாரிபோர்ஸ் சாபா |
அமைப்புப் பொறியாளர் | பிளின்ட் & நெயில் |
முதன்மை ஒப்பந்தகாரர் | பொறியியல்கட்டுமானம்& ஒப்பந்த நிறுவனம்,லார்சன்& டூப்ரோ |