தமிழ்ஒளி
தமிழ் எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
தமிழ்ஒளி (இயற்பெயர்: விசயரங்கம், 21 செப்டம்பர் 1924 – 29 மார்ச்சு 1965) ஒரு தமிழ்க் கவிஞர் ஆவார். பாரதியாரின் வழித் தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர்.[1] கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர். திராவிடர் கழகத் தொண்டராக இருந்து பிற்காலத்தில் பொதுவுடைமை இயக்கத்தில் ஈடுபட்டவர். 'பட்டியலின மக்களின் இழிநிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி கவிதைகள் எழுதினார்.
விரைவான உண்மைகள் தமிழ்ஒளி, பிறப்பு ...
தமிழ்ஒளி | |
---|---|
பிறப்பு | விசயரங்கம் 21 செப்டம்பர் 1924 ஆடூர் அகரம், தென் ஆற்காடு மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது கடலூர் மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 29 மார்ச்சு 1965(1965-03-29) (அகவை 40) பாண்டிச்சேரி (தற்போது புதுச்சேரி), இந்தியா |
தொழில் | எழுத்தாளர், கவிஞர் |
மொழி | தமிழ் |
தேசியம் | தமிழர் |
குடியுரிமை | இந்தியர் |
கல்வி நிலையம் | கரந்தைத் தமிழ்க் கல்லூரி |
வகை | கவிதை, கதை, கட்டுரை, இலக்கியத் திறனாய்வு, மேடை நாடகம், குழந்தைப் பாடல் |
கருப்பொருள் | பொதுவுடைமை, திராவிடம், தலித்தியம் |
இலக்கிய இயக்கம் | ![]() ![]() * தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் |
மூடு