தஞ்சோங் பியாய்
தீபகற்ப மலேசியாவின் ஆகத் தெற்கே; ஐரோவாசியாவின் தென்முனைக் கோடி நிலப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
தஞ்சோங் பியாய் என்பது (மலாய்: Tanjung Piai; ஆங்கிலம்: Tanjung Piai; சீனம்: 丹绒比艾) மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், பொந்தியான் மாவட்டத்தில்; தீபகற்ப மலேசியாவின் ஆகத் தெற்கே அமைந்துள்ள இடம். தவிர ஐரோப்பா; ஆசியா கண்டங்களான ஐரோவாசியாவின் (Eurasia) தென்முனைக் கோடி நிலப் பகுதி இந்த இடத்தில்தான் அமைந்து உள்ளது.
Tanjung Piai | |
---|---|
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 1°15′58″N 103°30′39″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | ஜொகூர் |
நகரத் தோற்றம் | 1850-களில் |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | கண்காணிப்பு இல்லை |
அஞ்சல் குறியீடு | 81xxx |
இங்கு இருந்து சிங்கப்பூர் தீவையும்; ஜொகூர் நீரிணையையும் முழுமையாகப் பார்க்க இயலும். காட்டு மரங்களில் கட்டப்பட்ட படகுத் துறைகள்; அரிதான கடற்கரையோரச் சூழல்; மாசு இல்லாத சதுப்புநிலக் காடுகள்; சூழப்பட்டுள்ள இந்த இடம் தீபகற்ப மலேசியாவின் சொர்க்க வாசல் என்றும் புகழப் படுகிறது. தஞ்சோங் பியாய் துறைமுகப் பட்டினம் பொந்தியான் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
தஞ்சோங் பியாய் தேசியப் பூங்கா (Tanjung Piai National Park) எனும் ஓர் அழகிய வனப்பூங்காவை இங்கு அமைத்து இருக்கிறார்கள்.[1]