தஞ்சைப் பெருவுடையார் கோயில்
11 ஆம் நூற்றாண்டில் சோழர் கட்டிய சிவன் கோவில், யுனெஸ்கோ உலகப் பாரம்பரியத் தளம் / From Wikipedia, the free encyclopedia
தஞ்சைப் பெருவுடையார் கோயில் (Big temple) அல்லது தஞ்சைப் பெரிய கோயில் (Peruvudayar Temple) (சமசுகிருதம்:பிரகதீசுவரர் கோவில், Birahadeeswarar Temple) என்றும் அறியப்படும் தலம் தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள திருவிசைப்பா பாடல் பெற்ற சிவன் கோயிலாகும். இக்கோயில் உலகப் பாரம்பரிய சின்னமும் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்றாகவும்,[1] தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கும் இக்கோவில் அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியா கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. பொ.ஊ. 10-ஆம் நூற்றாண்டில் புகழ் பெற்ற தமிழ் சோழ பேரரசர் முதலாம் இராசராச சோழன் இக்கோயிலைக் கட்டுவித்தார்.[2] பொ.ஊ. 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி பொ.ஊ. 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010 ஆவது ஆண்டோடு 1000 ஆண்டுகள் நிறைவடைந்தன.[3]
திருவிசைப்பா பாடல் பெற்ற தஞ்சைப் பெருவுடையார் கோயில் | |
---|---|
புவியியல் ஆள்கூற்று: | 10.782800°N 79.131800°E / 10.782800; 79.131800 |
பெயர் | |
புராண பெயர்(கள்): | தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் |
பெயர்: | தஞ்சைப் பெருவுடையார் கோயில் |
அமைவிடம் | |
ஊர்: | தஞ்சாவூர் |
மாவட்டம்: | தஞ்சாவூர் |
மாநிலம்: | தமிழ்நாடு |
நாடு: | இந்தியா |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | பெருவுடையார், பிரகதீசுவரர் |
உற்சவர்: | தியாகராசர் |
தாயார்: | பெரியநாயகி, பிரகன்நாயகி |
உற்சவர் தாயார்: | கமலாம்பிகை |
தல விருட்சம்: | வன்னி மரம் |
தீர்த்தம்: | சிவகங்கை தீர்த்தம் |
சிறப்பு திருவிழாக்கள்: | மகா சிவராத்திரி, சித்திரை திருவிழா |
பாடல் | |
பாடல் வகை: | திருவிசைப்பா |
பாடியவர்கள்: | கருவூரார் |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | திராவிடக் கட்டிடக்கலை |
கல்வெட்டுகள்: | தமிழ் கல்வெட்டுகள் |
வரலாறு | |
தொன்மை: | 1000 ஆண்டுகள் |
நிறுவிய நாள்: | பொ.ஊ.-10 ஆம் நூற்றாண்டு |
கட்டப்பட்ட நாள்: | 7 ஆண்டுகள் (பொ.ஊ.-1003 முதல் பொ.ஊ.-1010 வரை) |
அமைத்தவர்: | முதலாம் இராசராச சோழன் |
கட்டடக் கலைஞர்: | இராசராச குஞ்சரமல்ல பெருந்தச்சன் |
இக்கோயில் தமிழகத்தின் மிக முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகிறது.[4] 1987 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டது.[5] அழியாத சோழர் பெருங்கோயில்கள் என்ற பெயரில் இக்கோயில், கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில், தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில் ஆகிய மூன்றும் இயுனெசுகோ நிறுவனத்தால் பொது ஊழி உலகப்பாரம்பரியக் களப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.[6]
தஞ்சைப் பெருவுடையார் கோயில் பிரகதீசுவரர் ஆலயம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | கலாச்சாரம் சார் |
ஒப்பளவு | ii, iii |
உசாத்துணை | 250 |
UNESCO region | ஆசியா-பசுபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1987 (11வது தொடர்) |
தஞ்சாவூர் அரண்மனை தேவத்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும்.[7] இத்தலம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு திருத்தலங்களில் ஒன்றாகும்.[8]