ஜித்ரா போர்
மலேசியா, கெடா, ஜித்ராவில் 1941 டிசம்பர் 10-ஆம் தேதி நடந்த போர் / From Wikipedia, the free encyclopedia
ஜித்ரா போர் (ஆங்கிலம்: Battle of Jitra; மலாய்: Pertempuran di Jitra); என்பது இரண்டாம் உலகப் போரின் போது பிரித்தானிய இந்தியாவிற்கும், சப்பானியப் பேரரசிற்கும் இடையே தீபகற்ப மலேசியா, கெடா, ஜித்ரா காட்டுப் பகுதிகளில்; 1941 டிசம்பர் 10-ஆம் தேதியில் இருந்து 1941 டிசம்பர் 13-ஆம் தேதி வரையில் நடைபெற்ற போரைக் குறிப்பிடுவதாகும்.
ஜித்ரா போர் Battle of Jitra Pertempuran Jitra |
|||||||
---|---|---|---|---|---|---|---|
பசிபிக் போர் இரண்டாம் உலகப் போர் பகுதி |
|||||||
மலாயா தீபகற்பத்தின் வரைபடம். கெடா மாநிலத்தில், (மேல் இடது புறத்தில்) ஜித்ரா அமைந்துள்ளது. |
|||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
பிரித்தானியா | சப்பான் | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
டேவிட் முரே லியோன் | தக்குரோ மாட்சுயி | ||||||
படைப் பிரிவுகள் | |||||||
11-ஆவது தரைப்படை | 5-ஆவது தரைப்படை | ||||||
இழப்புகள் | |||||||
பிரித்தானியா 26+ இறப்புகள் இந்தியா 350+ இறப்புகள் | சப்பான் 6 தகரிகள் அழிப்பு 1+ தகரி சேதம் 27 இறப்புகள் 83 காயம் அடைந்தோர்[1] |
இந்தப் போரில் பிரித்தானிய கூட்டுப் படைகள் தோல்வி அடைந்தன. அதன் விளைவாக, பிரித்தானியக் கூட்டுப் படைகளின் தளபதியாக இருந்த ஆர்தர் பெர்சிவல், மலாயாவில் செயல்பாட்டில் இருந்த அனைத்து நேச நாட்டு வான்படை வானூர்திகளையும் சிங்கப்பூருக்குத் திரும்பி வருமாறு கட்டளையிட்டார்.
சிங்கப்பூரில் இருந்த தலைமையகத்திற்கும், ஜித்ரா போர் முனையில் இருந்த கள அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடான கருத்துப் புரிதல்களால் நேச நாட்டுக் கூட்டுப் படைகளுக்குப் பாதகமான விளைவுகள் ஏற்பட்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர்.