ஜானகி கோயில்
From Wikipedia, the free encyclopedia
ஜானகி கோயில் (Janaki Mandir) (நேபாளி: जानकी मन्दिर) நேபாள நாட்டின் தனுஷா மாவட்டத்தின் ஜனக்பூர் நகரத்தில் அமைந்துள்ளது. இக்கோயில் சனகன் மகளான ஜானகிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இந்து கோயிலாகும்.[1] நேபாள மற்றும் இராஜபுத்திரர்களின் கட்டிடக் கலையில் வெள்ளை நிறத்தில் கட்டப்பட்ட இக்கோயில் 50 மீட்டர் உயரமும், 4,860 சதுர அடி பரப்பளவும் கொண்டுள்ளது. மூன்று தளங்கள் கொண்ட இக்கோயில் பளிங்கு மற்றும் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் அறுபது அறைகள் கொண்டது. பல வண்ண கண்ணாடிகள், சித்திரங்கள், நுணுக்க வேலைப்பாடுகள் கொண்ட சன்னல்கள் கொண்டுள்ளன. புராண வரலாற்றின் படி, மிதிலை நகரைத் தலைநகராகக் கொண்ட விதேக நாட்டின் மன்னர் சனகரின் மகளான சீதைக்கும், அயோத்தியைத் தலைநகராகக் கொண்ட கோசலை நாட்டின் மன்னர் தசரதனின் மகனான இராமருக்கும் இக்கோயில் அருகே அமைந்த மாளிகையில் திருமணம் நடந்தது.
ஜானகி கோயில் | |
---|---|
மைதிலி மக்களின் கோயில் | |
ஆள்கூறுகள்: | 26°43′50″N 85°55′32″E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | நெள லக்கா கோயில் |
பெயர்: | ஜானகி மந்திர் |
அமைவிடம் | |
நாடு: | நேபாளம் |
மாவட்டம்: | தனுஷா மாவட்டம் |
அமைவு: | ஜனக்பூர் |
ஏற்றம்: | 78 m (256 அடி) |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | சீதை (ஜானகி), இராமர் |
சிறப்பு திருவிழாக்கள்: | சீதா கல்யாணம், ராம நவமி, தீபாவளி |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | இந்து-இராஜபுத்திர கட்டிடக்கலை |
கோயில்களின் எண்ணிக்கை: | 70 |
நினைவுச்சின்னங்களின் எண்ணிக்கை: | 27 |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | கி பி 1910 |
இணையதளம்: | Janakitemple.gov.np |