ஜம்புத் தீவு பிரகடனம்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் / From Wikipedia, the free encyclopedia
ஜம்புத் தீவு பிரகடனம் / ஜம்பூத்வீபப் பிரகடனம் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆற்காட்டு நவாப்பிடமிருந்து பெற்று நேரடியாக வரி திரட்டலை நடத்திய காலத்தில், தமிழக சிற்றரசர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் நடத்தினர். முத்து வடுகநாதர் கொல்லப்பட்ட பின் அவரின் தளபதிகள் மருதிருவர் ஆட்சிப் பொறுப்பேற்றனர். அக்காலம், ஆங்கிலேயரின் படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து திருச்சியில் சின்ன மருது வெளியிட்ட மறுப்பு அறிவிப்புதான் ஜம்புத் தீவு பிரகடனம். இந்த அறிக்கை, 1801 ஆம் ஆண்டு சூன் மாதம் 16 ஆம் தேதி திருச்சிக் கோட்டையில் ஒட்டப்பட்டது.[1]