பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்
பிரித்தானிய வர்த்தக நிறுவனம் (1600–1874) / From Wikipedia, the free encyclopedia
பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் (East India Company) ஒரு கூட்டுப் பங்கு நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பேச்சுவழக்கில் ஜான் நிறுவனம் (John Company) எனவும் அறியப்பட்டது.[2]
நிறுவனத்தின் கொடி (1801) | |
சின்னம் (1698) குறிக்கோள்: Auspicio Regis et Senatus Angliae இலத்தீன்: "இங்கிலாந்து அரசர் மற்றும் பாராளுமன்றத்தின் கட்டளைப்படி" | |
முன்னைய வகை | பொது நிறுவனம் பகுதி அரசுக்கு சொந்தமான நிறுவனம்[1] |
---|---|
நிலை | தேசியமயமாக்கப்பட்டது:
|
நிறுவுகை | 31 திசம்பர் 1600; 423 ஆண்டுகள் முன்னர் (1600-12-31) |
நிறுவனர்(கள்) |
|
செயலற்றது | 1 சூன் 1874; 150 ஆண்டுகள் முன்னர் (1874-06-01) |
தலைமையகம் | இலண்டன், பெரிய பிரித்தானியா கிழக்கிந்திய இல்லம் |
தொழில்துறை | பன்னாட்டு வணிகம் |
உற்பத்திகள் | பருத்தி, பட்டு, இண்டிகோ சாயம், சர்க்கரை, உப்பு, மசாலாப் பொருள், வெடியுப்பு, தேநீர், அடிமை வணிகம் மற்றும் அபின் |
துவக்கத்தில் இதன் சாற்றுரையில் "கிழக்கிந்தியாவில் வணிகம் புரிய இலண்டன் வர்த்தகர்களின் நிறுவனமும் ஆளுநரும்" என்றிருந்தாலும் இதன் வணிகம் உலக வணிகத்தில் பாதியளவிற்கு உயர்ந்தது; குறிப்பாக பருத்தி, பட்டு, தொட்டிச் சாயம், உப்பு, வெடியுப்பு, தேயிலை, அபினி ஆகிய அடிப்படை பொருட்களில் வணிகமாற்றியது.
இது 1600-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி, இந்தியாவில் பிரித்தானியாவுக்கு வணிக முறையிலான முன்னுரிமைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் தொடங்கப்பட்டு, முதலாம் எலிசபெத் மகாராணியால் இதற்கு ஆங்கிலேய அரசப் பட்டயம் (English Royal Charter) வழங்கப்பட்டது. இப்பட்டயம், கிழக்கிந்தியப் பகுதிகளுடனான எல்லாவிதமான வணிகத்திலும் 21 ஆண்டுகாலத் தனியுரிமையை (monopoly) இந்நிறுவனத்துக்கு வழங்கியது. ஒரு வணிக முயற்சியாகத் தொடங்கப்பட்ட போதும், இந்தியாவில் பிரித்தானியப் பேரரசு விரிவடைய அடித்தளம் வகுத்தது.[3] ஆட்சி, மற்றும் இராணுவச் செயற்பாடுகளில் ஈடுபட்டு, இந்தியாவையும், இலங்கை முதலிய நாடுகளை ஆளும் நிலைக்கு வந்தது. இந்த கம்பெனி வணிகத்தை கட்டுப்படுத்தியது மட்டுமல்லாமல் அதனை அடிமைப்படுத்தி, காலனித்துவப்படுத்தி ஆட்சிசெய்யும் அமைப்பாக மாறியது. சிப்பாய்க் கிளர்ச்சிக்குப்பின், 1858-ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை ஐக்கிய இராச்சியத்தால் கலைக்கப்பட்டு இதன் கட்டமைப்புக்களை ஐக்கிய இராச்சியம் நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது.