![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/8/8d/Battle_of_Chaereonea.jpg/640px-Battle_of_Chaereonea.jpg&w=640&q=50)
செரோனியா சமர் (கிமு 338)
கிமு 338 இல் நடந்த சமர் / From Wikipedia, the free encyclopedia
செரோனியா சமர் (Battle of Chaeronea (338 BC) என்பது கிமு 338 இல், போயோட்டியாவில் உள்ள செரோனியா நகருக்கு அருகில் நடந்த ஒரு சமர் ஆகும். இது இரண்டாம் பிலிப்பின் தலைமையிலான மாக்கெடினியாவிற்கும் ஏதென்சு மற்றும் தீப்சு ஆகிய நகர அரசுகளின் தலைமையிலான கூட்டணிக்கும் இடையே நடந்த சமராகும். கிமு 339-338 இல் பிலிப்பின் இறுதிப் போர்த் தொடர்களின் உச்சக்கட்டமாக இந்தப் போர் இருந்தது. இதன் முடிவில் மாசிடோனியர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளுக்கு தீர்க்கமான ஒரு வெற்றி கிடைத்தது.
செரோனியா சமர் | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
இரண்டாம் பிலிப்பின் கீழ் மக்கெடோனியாவின் விரிவாக்கம் பகுதி | |||||||||
![]() கேசலின் இல்லஸ்ட்ரேட்டட் யுனிவர்சல் இஸ்டரியில் இருந்து, செரோனியா சமரின் 1882 சித்தரிப்பு. |
|||||||||
|
|||||||||
பிரிவினர் | |||||||||
| |||||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||||
|
|||||||||
பலம் | |||||||||
| 35,000 | ||||||||
இழப்புகள் | |||||||||
140 கொல்லப்பட்டனர் |
|
||||||||
மூன்றாம் புனிதப் போரை முடித்துக்கொண்டு, வட ஏஜியனில் தனது மேலாதிக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக ஏதென்சுடன் தனக்கு இருந்துவந்த பத்து ஆண்டுகால மோதலை பிலிப் முடிவுக்கு கொண்டுவந்தார். அமைதி உடன்பாட்டைக் கொண்டுவந்ததன் வழியாக, கிமு 346 இல், போரினால் பாதிக்கப்பட்ட கிரேக்கத்தில் அமைதியைக் கொண்டுவந்தார். அதன் பிறகு பிலிப்பின் மிகவும் விரிவாக்கப்பட்ட இராச்சியம், ஆற்றல்வாய்ந்த படை, ஏராளமான வளங்கள் போன்றவை அப்போது அவரை கிரேக்கத்தின் நடைமுறைப்படியான தலைவராக்கியது. கிமு 346க்குப் பிறகு பல சுதந்திர நகர அரசுகளுக்கு பிலிப்பின் அதிகாரம் ஒரு அச்சுறுத்தலாகப் பார்க்கபட்டது. குறிப்பாக ஏதென்சின், அரசியல்வாதியான டெமோஸ்தனிஸ் பிலிப்பின் செல்வாக்கிலிருந்து ஏதென்சை விலகுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். கிமு 340 இல், பிலிப்பின் பிரதேசங்களுக்கு எதிராக போர் நடவடிக்கை எடுக்கவும், பிலிப்பால் முற்றுகையிடப்பட்ட பைசாந்தியத்தில் உள்ள அகாமனிசியர்களுடன் கூட்டுச் சேரவும் ஏதெனிய சட்டசபையில் டெமோஸ்தீனஸ் வலியுறுத்தினார். இந்த நடவடிக்கைகள் பிலிப்புடனான உடன்படிக்கை விதிமுறைகளுக்கு எதிராக இருந்தன. மேலும் அவை போர் பிரகடனத்திற்கு இணையானவையாக இருந்தன. கிமு 339 கோடையில், பிலிப் தனது படைகளை தென் கிரேக்கத்தை நோக்கி வழிநடத்தினார். இது அவருக்கு எதிராக ஏதென்சு மற்றும் தீப்சு தலைமையில் சில தெற்கு கிரேக்க அரசுகளைக் கொண்ட ஒரு கூட்டணியை உருவாக்கத் தூண்டுகோலானது.
பல மாத முட்டுக்கட்டைக்குப் பிறகு, தீப்சு மற்றும் ஏதென்சுக்கு அணிவகுத்துச் செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக பிலிப் இறுதியாக போயோட்டியாவிற்கு முன்னேறினார். அவரை எதிர்த்து, செரோனியாவுக்கு அருகில் பாதைதைத் தடுத்தது, நேச நாட்டு இராணுவம் வலுவான அளவில் நிலைகொண்டது. அடுத்தடுத்த போர் குறித்த விவரங்கள் குறைவாகவே உள்ளன. ஆனால் நீண்ட சமருக்குப் பிறகு மாசிடோனியர்கள் கூட்டணிப் படைகளை இரு பக்கங்களிலிம் சுற்றிவளைத்து நசுக்கினர். இதனால் அவர்கள் தோல்வியடைந்தனர்.
இந்த போர் பண்டைய உலகில் மிகவும் தீர்க்கமான ஒன்றாக விவரிக்கப்பட்டுள்ளது. இப்போரில் ஏதென்சு மற்றும் தீப்சின் படைகள் அழிக்கப்பட்டதைத், தொடர்ந்து போர் முடிவுக்கு வந்தது. தெற்கு கிரேக்கம் மீது எசுபார்த்தாவைத் தவிர அனைத்து அரசுகளும் ஏற்றுக்கொண்ட ஒரு தீர்வை பிலிப் தான் விரும்பியபடி திணிக்க முடிந்தது. இதன் விளைவாக கொரிந்து கூட்டணி பிலிப்பால் உருவாக்கப்பட்டது. இதில் இருந்த அனைத்து பங்கேற்பாளர்களையும் மாசிடோன் உள்ளட்ட அரசுகளை ஒருவருக்கொருவர் நட்பு நாடுகளாக ஆக்கியது. பிலிப் அமைதிக்கான உத்தரவாதமாக இருந்தார். இதையொட்டி, பிலிப் நீண்டகாலமாகத் திட்டமிட்டிருந்த அகாமனிசியப் பேரரசுக்கு எதிரான ஹெலனிக் முழுமைக்குமான கூட்டணிப் படைகளின் ஸ்ரடிகெசாக (தளபதி) தேர்ந்தெடுக்கபட்டார். இருப்பினும், போர்த்தொடருக்கான பொறுப்பை ஏற்கும் முன், பிலிப் படுகொலை செய்யப்பட்டார். அதன் பிறகு பாரசீகத்துடனான போருக்கான பொறுப்பு அவரது மகன் அலெக்சாந்தர் வசம் வந்து சேர்ந்தது.