செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்
From Wikipedia, the free encyclopedia
தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை தமிழ் மொழியின் சொல்வளத்தையும், காலப்பழமையையும், தனித்தன்மையையும் வெளிக் கொண்டு வர வேண்டுமென்பதற்காக தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி வெளியிடும் நோக்கத்துடன் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் ( Directorate of Tamil
Etymological Dictionary Project) ஒன்றை அமைத்தது.
உருவாக்கம் | 1974 |
---|---|
வகை | அரசு |
நோக்கம் | அகரமுதலிகளை உருவாக்குவதுடன், கலைச்சொற்கள் உருவாக்கும் பணி |
தலைமையகம் | சென்னை |
தலைமையகம் |
|
சேவை பகுதி | தமிழ்நாடு |
அமைச்சர் | மு. பெ. சாமிநாதன் |
செயலாளர் | முனைவர் இல. சுப்பிரமணியன் இ.ஆ.ப [1] [2] |
இயக்குநர் | க. பவானி |
வலைத்தளம் | www |
இந்த இயக்ககத்தின் சார்பில் 12 மடலங்களில் (volumes) அடங்கும் 31 தொகுதிகளும் 13,327 பக்கங்கள் கொண்ட செந்தமிழச் சொற்பிறபியல் பேரகரமுதலி என்ற நூலாக வெளியிடப் பெற்றுள்ளன. இவை மிக விரிவான முறையில் சொற்களின் வேரும் வரலாறும் காட்டியும், பட விளக்கங்கள், இலக்கண, இலக்கிய, கல்வெட்டு, நாட்டுப்புறச் சொல் விளக்கங்க மேற்கோள்களைக் கொண்டும், திராவிட மொழிகளிலும், உலக மொழிகளிலும் தமிழ்ச் சொற்களின் ஊடாட்டத்தைக் காட்டியும் அரைக்கலைக்களஞ்சிய அமைப்பில் வெளியிடப் பெற்றிருக்கின்றன. இதன் முதல் பகுதி 1985 ஆம் ஆண்டிலும், கடைசித் தொகுதியான 31 ஆம் தொகுதி 2011 ஆம் ஆண்டிலுமாக வெளியிடப் பெற்றது.[1]
தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியை எண்மப்படுத்த (கணனி மயமாக்க) நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. [3]