செங்கல்பட்டு மாவட்டம்
தமிழ்நாட்டில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
இக்கட்டுரை மாவட்டம் பற்றியது, இதே பெயரில் உள்ள தலைமையிடம் மற்றும் நகரம் பற்றி அறிய செங்கல்பட்டு கட்டுரையைப் பார்க்க.
செங்கல்பட்டு மாவட்டம் (Chengalpattu District) இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளைக் கொண்டு செங்கல்பட்டு மாவட்டம் நிறுவுவதற்கான அரசாணை 12 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு அரசால் வெளியிடப்பட்டது.[1] தமிழகத்தின் 37-ஆவது மாவட்டமாக செங்கல்பட்டு மாவட்டம் அறிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தின் துவக்க விழா 29 நவம்பர் 2019 அன்று செங்கல்பட்டில் நடைபெற்றது.[2] இம்மாவட்டத்தின் தலைநகரம் செங்கல்பட்டு நகரம் ஆகும்.
செங்கல்பட்டு | |
மாவட்டம் | |
மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் | |
செங்கல்பட்டு மாவட்டம்: அமைந்துள்ள இடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
தலைநகரம் | செங்கல்பட்டு |
பகுதி | வட மாவட்டம் |
ஆட்சியர் |
திரு. ஆ.ர. ராகுல் நாத், இ.ஆ.ப. |
காவல்துறைக் கண்காணிப்பாளர் |
மருத்துவர். பொ. விஜயகுமார், இ.கா.ப. |
வருவாய் கோட்டங்கள் | 3 |
வட்டங்கள் | 8 |
மாநகராட்சி | 1 |
நகராட்சிகள் | 4 |
பேரூராட்சிகள் | 6 |
ஊராட்சி ஒன்றியங்கள் | 8 |
ஊராட்சிகள் | 359 |
வருவாய் கிராமங்கள் | 636 |
சட்டமன்றத் தொகுதிகள் | 7 |
மக்களவைத் தொகுதிகள் | 3 |
பரப்பளவு | 2944.96 ச.கி.மீ. |
மக்கள் தொகை |
25,56,244 (2011) |
அலுவல் மொழி(கள்) |
தமிழ் |
நேர வலயம் |
இ.சீ.நே. (ஒசநே+5:30) |
அஞ்சல் குறியீடு |
603 XXX, 600 XXX |
தொலைபேசிக் குறியீடு |
044 |
வாகனப் பதிவு |
TN-19, TN-14, TN-22, TN-85 மற்றும் TN-11 |
இணையதளம் | chengalpattu |