![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/18/Swoyambhu_Nath_Kathmandu.jpg/640px-Swoyambhu_Nath_Kathmandu.jpg&w=640&q=50)
சுயம்புநாதர் கோயில்
From Wikipedia, the free encyclopedia
சுயம்புநாதர் கோயில் (Swayambhunath) (சமசுகிருதம்: स्वयम्भूनाथ स्तुप) நேபாள நாட்டின் காத்மாண்டு சமவெளியில் நேபாளத் தேசியத் தலைநகரம் காத்மாண்டிற்கு மேற்கே சிறிது தொலைவில் 365 படிக்கட்டுகள் கொண்ட ஒரு சிறு மலையில் தூபியுடன் அமைந்த பண்டைய காலப் பௌத்த கோயிலாகும். இருப்பினும் இது இந்து மற்றும் பௌத்தப் பயணிகளுக்குப் புனிதமான மலைக் கோயிலாகும்.[1]
சுயம்புநாதர் கோயில் | |
---|---|
![]() | |
தகவல்கள் | |
முகவரி | சுயம்பு, காட்மாண்டு |
நாடு | நேபாளம் |
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5a/Vairochana_buddha.jpg/640px-Vairochana_buddha.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/a/af/Swayambhu_Nath_Temple.jpg/640px-Swayambhu_Nath_Temple.jpg)
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9b/Le_Stupa_de_Swayambhunath_%28Katmandou%2C_N%C3%A9pal%29_%288476438279%29.jpg/640px-Le_Stupa_de_Swayambhunath_%28Katmandou%2C_N%C3%A9pal%29_%288476438279%29.jpg)
சுயம்புநாதர் வளாகம் ஒரு பௌத்த நினைவுத் தூணையும், பல கோயில்களையும் கொண்டுள்ளது. அவற்றுள் பல கிறித்து பிறப்பிற்கு முன், லிச்சாவி அரச குலத்தினரால் எழுப்பப்பட்டதாகும். சுயம்புநாதர் கோயில் வளாகத்தில், புத்த விகாரம், தூண், அருங்காட்சியகம், நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
சுயம்புநாதர் விகாரத்தில் அமைந்த தூணின் நாற்புறத்தில் புத்தரின் அழகிய கண்கள் வரையப்பட்டுள்ளன.. இவ்வளாகத்தில் உணவு விடுதிகள், கடைகள், தங்கும் விடுதிகள் ஆகியன அமைக்கப்பட்டுள்ளன. 365 படிக்கட்டுகள் வழியாக மலையின் உச்சியில் உள்ள பௌத்தநாத் கோயிலை அடையலாம். தெற்கில் உள்ள மலைச்சாலை வழியாகச் சிற்றுந்துகளில் கோயிலை அடையலாம்.
படிக்கட்டுகள் வழியாகச் செல்லும் போது முதலில் பெரிய அழகிய வஜ்ராயுதத்தைக் காணலாம். பின்னர் பெரிய வெள்ளை நிற அரைக் கோள வடிவக் கோயிலின் கூரை மற்றும் நான்கு புறத்திலும் புத்தரின் கண்கள் வரையப்பட்ட தூணைக் காணலாம்.[2]
வஜ்ஜிரயான பௌத்த சமயப் பிரிவின் நேபாள நேவார் பௌத்த மரபின்படி, பௌத்தநாத் வளாகம், உருவங்களினால் அல்லது வரிவடிவங்களினால் பொருளை விளக்குதல் என்ற முறைப்படி சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளது. இவ்வளாகத்தில் பௌத்த மற்றும் இந்து தத்துவப் பிரிவுகளின் களமாக திகழ்கிறது.