![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7a/S._R._Ranganathan.jpg/640px-S._R._Ranganathan.jpg&w=640&q=50)
சீர்காழி இரா. அரங்கநாதன்
இந்திய கணிதவியலாளர் மற்றும் நூலகர் / From Wikipedia, the free encyclopedia
சீர்காழி இராமாமிருதம் அரங்கநாதன் (S. R. Ranganathan, 9 ஆகத்து 1892 - 27 செப்டம்பர் 1972) இந்தியாவைச் சேர்ந்த கணிதவியலாளரும், நூலகவியலாளரும் ஆவார். நூலகவியலின் ஐந்து விதிகளை அறிமுகம் செய்தவர்.[1] கோலன் வகைப்படுத்தல் முறையை உருவாக்கியவர்; இந்திய நூலகவியலின் தந்தை என அறியப்படுபவர். அத்துடன், நூலகவியலில் இவரது அடிப்படையான சிந்தனைகளுக்காக உலகின் பல பகுதிகளிலும் பெயர் பெற்றவர். நூலகவியலுக்குச் செய்த பங்களிப்புக்காக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கிக் கௌரவித்தது. இவரது பிறந்த நாளை, இந்தியாவில் தேசிய நூலக தினமாக அறிவித்துள்ளனர்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/eb/SR_Ranganathan_1992_stamp_of_India.jpg/640px-SR_Ranganathan_1992_stamp_of_India.jpg)
சீர்காழி இரா. அரங்கநாதன் S. R. Ranganathan | |
---|---|
![]() ஐதராபாத், நகர நடுவ நூலகத்தில் உள்ள அரங்கநாதனின் படம். | |
பிறப்பு | (1892-08-09)9 ஆகத்து 1892 சீர்காழி, பிரித்தானிய இந்தியா, (தற்போது - தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | செப்டம்பர் 27, 1972(1972-09-27) (அகவை 80) பெங்களூர், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
கல்வி | சென்னை கிறித்தவக் கல்லூரி |
பணி | நூலகவியலாளர் |
அறியப்படுவது | நூலகவியலின் ஐந்து விதிகள் |
சமயம் | இந்து |
பெற்றோர் | இராமாமிருதம் சீதாலட்சுமி |
விருதுகள் | பத்மசிறீ |
இவர் இந்தியாவின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் நூலகராகவும், நூலகத் துறைப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். நூலகவியலில் உயர் பட்டங்களை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட இந்திய நூலகவியல் பள்ளியில் பணிப்பாளராகவும் பணியாற்றினார். தவிர, இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு நூலகவியல் சார்ந்த உயர்தொழிற் கழகங்களில், உறுப்பினராக இருந்து உயர் பதவிகளையும் வகித்துள்ளார்.