![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c1/Srinivasa_Ramanujan_-_OPC_-_1.jpg/640px-Srinivasa_Ramanujan_-_OPC_-_1.jpg&w=640&q=50)
சீனிவாச இராமானுசன்
கணித மேதை / From Wikipedia, the free encyclopedia
சீனிவாச இராமானுசன் (Srinivasa Ramanujan, திசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர் ஆவார். இவர் தனது 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசனின் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.[1]
![]() | இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
சீனிவாச இராமானுசன் Srinivasa Ramanujan FRS | |
---|---|
![]() | |
பிறப்பு | (1887-12-22)22 திசம்பர் 1887 ஈரோடு, சென்னை மாகாணம், இந்தியா |
இறப்பு | 26 ஏப்ரல் 1920(1920-04-26) (அகவை 32) கும்பகோணம், சென்னை மாகாணம், இந்தியா |
வேறு பெயர்கள் | சீனிவாச இராமானுசன் ஐயங்கார் |
குடியுரிமை | இந்தியர் |
துறை | கணிதம் |
பணியிடங்கள் | திரித்துவக் கல்லூரி, கேம்பிறிச்சு |
கல்வி |
|
ஆய்வேடு | பகு எண்கள் (1916) |
Academic advisors |
|
அறியப்படுவது |
|
தாக்கம் செலுத்தியோர் | சி. எசு. கார் |
பின்பற்றுவோர் | சி. எச்சு. ஆரிடி |
விருதுகள் | அரசக் கழக ஆய்வாளர் |
கையொப்பம் |