![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cf/Baba_Chamliyal_Mela_at_Indo-Pak_international_Border%252C_near_Jammu.jpg/640px-Baba_Chamliyal_Mela_at_Indo-Pak_international_Border%252C_near_Jammu.jpg&w=640&q=50)
சிம்லா ஒப்பந்தம்
From Wikipedia, the free encyclopedia
சிம்லா ஒப்பந்தம் (Simla Agreement)வங்காளதேச விடுதலைப் போரினைத் தொடர்ந்து இந்தியா-பாக்கித்தான் அரசுகளுக்கிடையே ராஜதந்திர நல்லுறவைகளை மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத் தலைநகரான சிம்லாவில் இந்திய அரசுக்கும் பாகிஸ்தான் அரசுக்கும் இடையே சூலை 28, 1972 இல் கையெழுத்தானது.[1].இது 1971 இல் நடந்த வங்காள தேச விடுதலைப் போருக்கு பின்னர் ஏற்படுத்தப்பட்டது. மேலும் இந்த ஒப்பந்தம் வங்காளதேச சுதந்திரத்திற்கு வழிவகுத்தது. வங்காளதேசம் அப்போது கிழக்கு பாக்கிஸ்தான் என்று அறியப்பட்டது. அது பாக்கிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்தது. 1971 இன் இந்திய-பாக்கிஸ்தானிய போரில் இந்தியா வங்காளத்திற்கு ஆதரவாக போரில் நுழைந்தது. போரின் இறுதியில் ஏற்பட்ட இவ்வொப்பந்தத்தை இரு நாடுகளின் நாடாளுமன்றங்களும் அதே ஆண்டில் பின்னேற்பு செய்தன.
இந்திய மற்றும் பாகிஸ்தான் இருதரப்பு தொடர்புகள் தொடர்பான ஒப்பந்தம் | |
---|---|
![]() | |
ஒப்பந்த வகை | நல்லுறவு மற்றும் அமைதி ஒப்பந்தம் |
அமைப்பு | பனிப்போர் |
வரைவு | சூலை 28, 1972 (1972-07-28) |
கையெழுத்திட்டது | சூலை 2, 1972; 52 ஆண்டுகள் முன்னர் (1972-07-02) |
இடம் | சிம்லா, இமாசலப் பிரதேசம், இந்தியா |
முத்திரையிட்டது | ஆகஸ்டு 3, 1972 |
நடைமுறைக்கு வந்தது | ஆகஸ்டு 4, 1972 |
நிலை | இருதரப்பு உறவுகளையும் சீர்செய்தல் |
காலாவதி | ஏப்ரல் 14, 1974 (1974-04-14) |
பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் | இந்திய-பாகிஸ்தான் நாட்டு வெளியுறவு அமைச்சகங்கள் |
கையெழுத்திட்டோர் | இந்திரா காந்தி ((இந்தியப் பிரதமர்)) சுல்பிகார் அலி பூட்டோ (பாகிஸ்தான் பிரதமர்)) |
தரப்புகள் | ![]() ![]() |
அங்கீகரிப்பவர்கள் | இந்திய நாடாளுமன்றம் பாகிஸ்தான் நாடாளுமன்றம் |
வைப்பகம் | இந்தியா மற்றும் பாக்கித்தான் |
மொழிகள் |
சிம்லா ஒப்பந்தத்தின் விளைவாக இந்திய-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே இருந்த சியாச்சின் பிணக்கு, மனக்கசப்புகள் மற்றும் காஷ்மீர் குறித்தான சர்ச்சைகள் முடிவுற்று இருதரப்பு நல்லுறவுகள் மேம்பட வழிவகுத்தது. மேலும், இனி ஏற்படும் இருதரப்பு உறவுகளுக்குத் தடையாக வரும் விசயங்களில் கவனம் செலுத்தி அதனைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டது.[2]