![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5f/Tomb_of_Sikandar_Lodi_in_Lodi_Garden_08.jpg/640px-Tomb_of_Sikandar_Lodi_in_Lodi_Garden_08.jpg&w=640&q=50)
சிக்கந்தர் லௌதி
லௌதி வம்சத்தின் 2வது சுல்தான் / From Wikipedia, the free encyclopedia
சிக்கந்தர் லௌதி (Sikandar Lodi; இறப்பு 21 நவம்பர் 1517), நிஜாம் கான் என்றப் பெயரில் பிறந்த இவர், பொ.ச.1489 - 1517க்கும் இடையில் தில்லி சுல்தானகத்தின் [1] [2] [3] பஷ்தூன் சுல்தான் ஆவார் . சூலை 1489இல் இவரது தந்தை பஹ்லுல் லௌதியின் மரணத்திற்குப் பிறகு இவர் லௌதி வம்சத்தின் ஆட்சியாளரானார். தில்லி சுல்தானகத்தின் லௌதி வம்சத்தின் இரண்டாவது மற்றும் மிகவும் வெற்றிகரமான ஆட்சியாளரான இவர் பாரசீக மொழிக் கவிஞராகவும் இருந்தார். மேலும், 9000 வசனங்களைக் கொண்ட ஒரு நூலையும் தயாரித்தார். [4] ஒரு காலத்தில் தில்லி சுல்தானகத்தின் ஒரு பகுதியாக இருந்த இழந்த பிரதேசங்களை மீட்டெடுக்க இவர் முயற்சி செய்தார். லௌதி வம்சத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தை விரிவாகினார்.
விரைவான உண்மைகள் சிக்கந்தர் லௌதி, 30வது தில்லி சுல்தான் ...
சிக்கந்தர் லௌதி | |
---|---|
தில்லி சுல்தானகத்தின் சுல்தான் லௌதி வம்சம் | |
![]() சிக்கந்தர் லௌதியின் கல்லறை | |
30வது தில்லி சுல்தான் | |
ஆட்சி | 17 சூலை 1489 – 21 நவம்பர் 1517 |
முடிசூட்டு விழா | 17 சூலை 1489 |
முன்னிருந்தவர் | பஹ்லுல் லௌதி |
பின்வந்தவர் | இப்ராகிம் லௌதி |
வாரிசு(கள்) | இப்ராகிம் லௌதி |
அரச குலம் | லௌதி வம்சம் |
தந்தை | பஹ்லுல் லௌதி |
பிறப்பு | 17 சூலை 1458 |
இறப்பு | 21 நவம்பர் 1517 (வயது 59) |
அடக்கம் | லோதி தோட்டங்கள், தில்லி |
சமயம் | இசுலாம் |
மூடு