இப்ராகிம் லௌதி
தில்லி சுல்தானகத்தின் 31வது சுல்தான் மற்றும் லௌதி வம்சத்தின் 3வது சுல்தான் / From Wikipedia, the free encyclopedia
இப்ராகிம் லௌதி ( Ibrahim Lodhi) (இறப்பு: ஏப்ரல் 21, 1526) என்பவர் தில்லி சுல்தானகத்தின் கடைசி ஆட்சியாளர் ஆவார்.[2][3] இவர் ஒரு ஆப்கானியர். குறிப்பாக, பஸ்தூன் இனத்தின் கில்சாய் பழங்குடியைச் சேர்ந்தவர். 1517 தொடக்கம் 1526 வரை இந்தியாவின் பெரும் பகுதியை இவர் ஆண்டார். பின்னர் இந்தியாவை மூன்று நூற்றாண்டுகள் வரை ஆண்ட முகலாயர் இவரை 1526 ஆம் ஆண்டில் தோற்கடித்து இந்தியாவைக் கைப்பற்றினர்.[4][5]
இப்ராகிம் கான் லௌதி | |
---|---|
தில்லி சுல்தான் லௌதி வம்சம் | |
31வது தில்லி சுல்தான் | |
ஆட்சி | 1517 – 21 ஏப்ரல் 1526 |
முடிசூட்டு விழா | 1517, ஆக்ரா |
முன்னிருந்தவர் | சிக்கந்தர் லௌதி |
பின்வந்தவர் | முகலாய அரசராக பாபர் பதவியேற்றதும் சுல்தானகம் ஒழிக்கப்பட்டது |
மரபு | லௌதி வம்சம் |
தந்தை | சிக்கந்தர் கான் லௌதி |
பிறப்பு | 1480[1] தில்லி |
இறப்பு | 21 ஏப்ரல் 1526 பானிப்பத், முகலாயப் பேரரசு தற்போதைய அரியானா, இந்தியா |
அடக்கம் | பானிபத் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு அருகில் |
இந்தியாவில் ஆட்சி செய்த அரச வம்சங்களுள் ஒன்றான லௌதி வம்சத்தின் கடைசி அரசர் இப்ராஹிம் லௌதி ஆவார். இவர் கி.பி. 1517 - ஆம் ஆண்டு முதல் கி.பி. 1526 வரை ஆட்சி செய்தார். இப்ராஹிமின் தந்தை சிக்கந்தர் லௌதி தாம் இறப்பதற்குமுன் தன் நாட்டைப் பிரித்து தில்லியைத் தலைநகராகக் கொண்ட பகுதியை மூத்த மகன் இப்ராஹிம் லௌதிக்கும், கல்பி கோட்டையினை மையமாகக் கொண்ட பகுதியை இளையமகன் சலால் கானுக்கும் வழங்கினார்.