![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/da/C.V._Vigneswaran.jpg/640px-C.V._Vigneswaran.jpg&w=640&q=50)
க. வி. விக்னேஸ்வரன்
From Wikipedia, the free encyclopedia
கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன் (C. V. Wigneswaran, சி. வி. விக்னேஸ்வரன், பிறப்பு: அக்டோபர் 23, 1939) இலங்கைத் தமிழ் உச்சநீதிமன்ற இளைப்பாறிய நீதிபதியும், அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.[1] இவர் வடக்கு மாகாண சபையின் முதலாவது முதலமைச்சராக 2013 முதல் 2018 வரை பதவியில் இருந்தார். இவர் மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதியாகவும், நீதித் துறை நடுவராகவும் பணியாற்றியவர்.
க. வி. விக்னேஸ்வரன் நாடாளுமன்ற உறுப்பினர் | |
---|---|
![]() 2015 இல் விக்னேசுவரன் | |
வடமாகாணத்தின் 1-வது முதலமைச்சர் | |
பதவியில் 7 அக்டோபர் 2013 – 23 அக்டோபர் 2018 | |
ஆளுநர் | ஜி. ஏ. சந்திரசிறி, எச். எம். ஜி. எஸ். பலிகக்கார ரெஜினால்ட் குரே |
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் ஆகத்து 2020 | |
தொகுதி | யாழ்ப்பாண மாவட்டம் |
வட மாகாண சபை உறுப்பினர் | |
பதவியில் 2013–2018 | |
தொகுதி | யாழ்ப்பாண மாவட்டம் |
மீயுயர் நீதிமன்ற நீதியரசர் | |
பதவியில் மார்ச் 2001 – அக்டோபர் 2004 | |
நியமிப்பு | சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க |
தலைவர் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
பொதுச் செயளாலர் தமிழ் மக்கள் கூட்டணி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கனகசபாபதி விசுவலிங்கம் விக்னேஸ்வரன் 23 அக்டோபர் 1939 (1939-10-23) (அகவை 84) கொழும்பு, இலங்கை |
இறப்பு | appointer appointer |
இளைப்பாறுமிடம் | appointer appointer |
குடியுரிமை | இலங்கையர் |
தேசியம் | இலங்கைத் தமிழர் |
அரசியல் கட்சி | தமிழ் மக்கள் கூட்டணி |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி |
பெற்றோர் |
|
வாழிடம்s | நல்லூர், இலங்கை |
முன்னாள் கல்லூரி | |
தொழில் | வழக்கறிஞர் |
இவர் 2011 செப்டம்பரில் நடைபெற்ற வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு 1,32,255 விருப்பு வாக்குகள் பெற்று வெற்றி பெற்று முதலாவது மாகாண சபையின் முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டார். 2018 அக்டோபர் 24 இல் முதலாவது வட மாகாணசபையின் காலம் முடியும் வரை இவர் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.[2] தனது பதவிக்காலம் முடிவடைந்த பின்னர், விக்னேசுவரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகி தமிழ் மக்கள் கூட்டணி என்ற பெயரில் புதிய கட்சியை 2018 அக்டோபர் 24 இல் ஆரம்பித்தார்.[3] இவர் 2020 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
விக்னேசுவரன் தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆகியவற்றின் தலைவர் ஆவார்.