![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/1a/Raja_Ravi_Varma%252C_Goddess_Saraswati.jpg/640px-Raja_Ravi_Varma%252C_Goddess_Saraswati.jpg&w=640&q=50)
சரசுவதி
From Wikipedia, the free encyclopedia
சரஸ்வதி அல்லது கலைமகள் அல்லது இயன்மகள் அல்லது சொன்மகள் இந்து சமயத்தினர் வணங்கும் முக்கியமான பெண் கடவுளரில் ஒருவர். படைப்புக் கடவுளான பிரம்மாவின் சக்தியாகக் கொள்ளப்படுகிறார். சரஸ்வதி என்னும் சமசுகிருதச் சொல் நகர்தல், ஆற்றொழுக்காகச் செல்லல் ஆகிய பொருள்களைக் கொண்ட ஸ்ர் என்னும் வேரின் அடியாகப் பிறந்தது. இருக்கு வேதத்தில் சரஸ்வதி ஒரு ஆறாக உருவகிக்கப்பட்டு உள்ளதாகச் சொல்லப்படுகின்றது. நீர், இந்துக்களின் பார்வையில் வளமை, படைப்பு, தூய்மைப்படுத்தல் முதலியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இதனால்தான் சரஸ்வதியும் இத்தகைய கருத்துருக்களோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளாள்.
சரசுவதி | |
---|---|
![]() சரசுவதி | |
வேறு பெயர்கள் | கலைமகள், வாணிதேவி (கலைவாணி), கலாவதி, சாவித்திரி, சாரதா, பாரதி, மாதவி, அபிநயா, அபிராமி (பிராமி/பிரம்மி), அமுதினி, அமுதசுரபி, அமுதவாகினி, (அமுதபாரதி/அமுதா), சரசபாரதி, இந்துபாரதி, சுகபாரதி, மஞ்சு பாரதி (மகா சரஸ்வதி) , பாமகள், நாமகள், சித்ரசேனா, வசுந்தரி, வசந்தினி, வசந்தா, இசைமடந்தை (வித்யாதேவி/கோகிலவாணி), காயத்ரிதேவி, சங்கீதா, சந்தியா, சத்யோஜினி (சத்யவாணி/சத்யகலா), சகலகலாவல்லி (சசிகலா)[1] |
தேவநாகரி | சரஸ்வதி |
சமசுகிருதம் | சரசுவதி |
வகை | தேவி |
இடம் | பிரம்மபுத்ரா |
மந்திரம் | ஓம் ஐம் சரசுவதியாயா சுவாக |
துணை | பிரம்மா |
'பேச்சுக் கலையின் தேவதை' எனப் பொருள்படும் ‘வாக் தேவி' என்ற பெயராலும் அழைக்கப்படுகிறாள்.[2]
இந்துக்கள், சரஸ்வதியைக் கல்விக் கடவுளாகவும், எல்லாக் கலைகளுக்கும் தலைவியாகவும் கருதுகிறார்கள். அறிவு, ஒளியாகவும், அறியாமை இருளாகவும் கருதப்படுகின்றது. இதனால்தான் சரஸ்வதியை வெண்மை நிறத்தோடு தொடர்பு படுத்துகிறார்கள். வெள்ளை ஆடை அணிந்தவளாகவும், வெள்ளைத் தாமரைப் பூவில் அமர்ந்திருப்பவளாகவும், சரஸ்வதியைச் சமய நூல்கள் வர்ணிக்கின்றன.
சரஸ்வதி எனும் பெயரில் இராகம் ஒன்றும் உள்ளது.