சத்தியவாணி முத்து
From Wikipedia, the free encyclopedia
சத்தியவாணி முத்து (பி.: பெப்ரவரி 15, 1923 - இ. நவம்பர் 11, 1999)[1] ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் செல்வாக்கான சமூக தலைவர். இவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் ராஜ்ய சபை உறுப்பினர் மற்றும் மத்திய அமைச்சராகவும் இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகக் கட்சியின் உறுப்பினராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய இவர் தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற சொந்தக் கட்சியை ஆரம்பித்தார். பின்னர் அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு இணைந்து விட்டது.