![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ee/Gorkha_district_location.png/640px-Gorkha_district_location.png&w=640&q=50)
கோர்க்கா மாவட்டம்
நேபாளத்தின் கண்டகி மாகாணத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கோர்க்கா மாவட்டம் (Gorkha District) (நேபாளி: गोरखा जिल्लाListenⓘ), நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் நேபாளத்தின் மேற்கு பிராந்தியத்தின், நேபாள மாநில எண் 4-இல் கண்டகி மண்டலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பிரிதிவி நாராயணன் நகரம் ஆகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ee/Gorkha_district_location.png/640px-Gorkha_district_location.png)
கோர்க்கா மாவட்டம் 3,610 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 272069 மக்கள் தொகையும் கொண்டது.[1] இம்மாவட்டத்தில் புகழ் பெற்றா மனகாமனா கோயில் அமைந்துள்ளது. [2]இம்மாவட்டத்தில் வாழும் குருங், நேவாரிகள், மகர்கள் மற்றும் செட்டிரி மக்கள் நேபாளி மொழி, நேவாரி மொழி, காலே மொழி மற்றும் மகர் மொழிகள் பேசுகின்றனர்.
இம்மாவட்டத்தில் கோரக்க சித்தரின் கோயில், கோரமான காளி கோயிலும் அமையப் பெற்றுள்ளது. இம்மாவட்டத்தில் செப்பி, தரௌதி, மர்ச்சியாந்தி மற்றும் புத்தி கண்டகி என நான்கு ஆறுகள் பாயும் இப்பகுதியில் கோர்க்கா நாடு அமைந்திருந்தது.