![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/df/Kohrvirab.jpg/640px-Kohrvirab.jpg&w=640&q=50)
கோர் விரப்
From Wikipedia, the free encyclopedia
கோர் விரப் (Khor Virap; ஆர்மீனியம்: Խոր Վիրապ, "ஆழமான குழி" அல்லது "ஆழமான கிணறு" எனப் பொருள்) என்பது துருக்கி எல்லைக்கு அருகில், ஆராத் மாகாணத்தின் அட்டசாத்தின் தெற்கில் கிட்டத்தட்ட 8 கிலோமீட்டர்கள் (5.0 mi) தூரத்தில் ஆர்மீனியாவிலுள்ள ஆராத் சமவெளியில் அமைந்துள்ள ஓர் ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை துறவியர் மடம் ஆகும்.[1][2] இந்த துறவியர் மடம் இறையியல் குருமடமாகவும் ஆர்மீனிய கத்தோலிக்கசுகளின் வசிப்பிடமாகவும் இருந்தது.[3]
கோர் விரப் | |
---|---|
![]() அரராத் மலையை பின்னனியாக் கொண்ட கோர் விரப் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | லுசராட், ஆராத் மாகாணம்![]() |
புவியியல் ஆள்கூறுகள் | 39.878333°N 44.576111°E / 39.878333; 44.576111 |
சமயம் | ஆர்மீனிய திருத்தூதர் திருச்சபை |
வழிபாட்டு முறை | ஆர்மீனியம் |
மாநிலம் | ஆர்மீனியா |
மாகாணம் | அரராத் |
ஆட்சிப்பகுதி | அட்டசாத் |
நிலை | நன்று |
செயற்பாட்டு நிலை | செயற்படுகிறது |
முன்பு கிரிகர் லுசாவோரிச் எனப்பட்டவர் பின்னர் புனித கிரகரி என்ற பெயர் பெற்றவருடைய இடம், துறவியர் மடம் என்பவற்றால் கோர் விரப் குறிப்பிடத்தக்கமை பெற்றுள்ளது. இவர் முதலில் அரசர் மூன்றாம் டிரிடோட்சினால் 14 வருடங்கள் சிறை வைக்கப்பட்டார். பின்னர் புனித கிரகரி அரசரின் சமய ஆலோசகராக இருந்து, அவர்கள் சமயம் மாறுபவர்களுக்கான நடவடிக்கையை நாட்டில் மேற்கொண்டனர். 301 ஆம் ஆண்டில், கிறித்தவ நாடு என்று அறிவித்த உலகில் முதல் நாடாக ஆர்மீனிய இருந்தது.[1][4][5]
ஆரம்பத்தில் சிறிய கோயில் ஒன்று புனித கிரகரியின் திருநிலைப்படுத்தலைக் குறிக்கும் விதமாக கி.பி 642 இல் கட்டப்பட்டது. பல நூற்றாண்டுகளான இது பலதடவைகள் மீள்கட்டுமானத்திற்குள்ளானது. 1662 இல், பழைய சிறு கோயில் இடுபாட்டுப் பகுதியில் பெரியளவில் "கடவுளின் பரித்தத் தாய்" எனும் பெயரில் கட்டப்பட்டது. தற்போது வழமையான தேவாலய வழிபாடுகள் இதில் நடைபெறுகிறது. ஆர்மீனியாவில் இது ஒரு மிகவும் பார்வையிடப்படும் இடமாகவுள்ளது.[5]