![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e5/Konijeti_Rosaiah_BNC.jpg/640px-Konijeti_Rosaiah_BNC.jpg&w=640&q=50)
கொனியேட்டி ரோசையா
From Wikipedia, the free encyclopedia
கொனிஜெடி ரோசையா (Konijeti Rosaiah, தெலுங்கு: కొణిజేటి రోశయ్య, 4 சூலை, 1933- 4 திசம்பர், 2021) ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் ஆவார்.[2][3] இந்திய தேசியக் காங்கிரசின் அரசியல்வாதியான அவர் அமைச்சுப் பதவிகளில் இருந்துள்ளார். அவர் மாநில நிதி அமைச்சராகப் பணியாற்றிய பாங்கு பெரிதும் பாராட்டப்பட்டது. ஆந்திராவில் 16 முறை வரவுசெலவு திட்டத்தை தாக்கல் செய்து சாதனை படைத்தவர். கட்சித் தலைமையின் கட்டளைக்கிணங்கி முதல்வர் பணியேற்ற இவர் நவம்பர் 24, 2010 அன்று தமது சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகினார்.[4] இவரது பதவி விலகலை அடுத்து கிரண்குமார் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார்.
விரைவான உண்மைகள் கொனிஜெடி ரோசையாKonijeti Rosaiah, 13வது தமிழக ஆளுநர் ...
கொனிஜெடி ரோசையா Konijeti Rosaiah | |
---|---|
![]() | |
13வது தமிழக ஆளுநர் | |
பதவியில் 31 ஆகஸ்டு 2011 – 30 ஆகஸ்டு 2016 | |
முன்னையவர் | சுர்சித் சிங் பர்னாலா |
பின்னவர் | சி. வித்தியாசாகர் ராவ் (கூடுதல் பொறுப்பு) |
15வது முதலமைச்சர், ஆந்திரப் பிரதேசம் | |
பதவியில் 03 செப்டம்பர் 2009 – 24 நவம்பர் 2010 | |
முன்னையவர் | யெ.சா.ராசசேகர ரெட்டி |
பின்னவர் | கிரண் குமார் ரெட்டி |
தொகுதி | குண்டூர்[1](சட்ட மேலவை உறுப்பினர்) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 4 சூலை 1933 (1933-07-04) (அகவை 91) வேமூரு, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம் இந்தியா ![]() |
இறப்பு | 4 திசம்பர் 2021(2021-12-04) (அகவை 88) |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | சிவலட்சுமி |
பிள்ளைகள் | கே எசு சுப்பாராவ், பி ரமாதேவி, கே எசு என் மூர்த்தி |
வாழிடம்(s) | அமீர்பேட், ஐதராபாத் |
மூடு
ஆகத்து 31, 2011 முதல் ஆகத்து 30, 2016 வரை தமிழ்நாட்டின் ஆளுநராகப் பணியாற்றினார்.[5]