கேரளத்தின் திருச்சூர் மாவட்டதில் உள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
கொடுங்கோளூர் என்றழைக்கப்பட்ட கொடுங்கல்லூர் (Kodungallur) என்பது இந்தியாவின் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் மலபார் கடற்கரையில் பெரியாற்றின் கரையில் உள்ள ஒரு வரலாற்று சிறப்புள்ள நகராகும். இது தேசிய நெடுஞ்சாலை 66-ஐ ஒட்டி, கொச்சிக்கு வடக்கே 29 கிலோமீட்டர் (18 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. கேரளத் தடாகங்களின் வடக்கு முனையில் ஒரு துறைமுக நகரமாக இருக்கும் கொடுங்கல்லூர், விரிவான கேரள உப்பங்கழிகளுக்கும், கடற்படைகளுக்கும் ஒரு முக்கிய நுழைவு இடமாக இருந்தது. முசிரி, மகோதயபுரம், முயிறுகோடு, முசிரிஸ் என்ற பெயர்களால் இதற்கு முன்னர் அழைக்கப்பட்டுள்ளது.
கொடுங்கல்லூர்
കൊടുങ്ങല്ലൂർ கொடுங்ஙல்லூர் | |
---|---|
முனிசிபல் பட்டணம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | திருச்சூர் |
பரப்பளவு | |
• மொத்தம் | 17.3 km2 (6.7 sq mi) |
ஏற்றம் | 9 m (30 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 33,543 |
• அடர்த்தி | 1,900/km2 (5,000/sq mi) |
மொழிகள் | |
• அதிகாரபூர்வமானவை | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அகு | 680 664 |
தொலைபேசிக் குறியீடு | 0480 |
வாகனப் பதிவு | KL-8 / KL 47 |
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கொடுங்கல்லூர் நகராட்சியிலும், சுற்றுப்புறங்களிலும் (தரம் II) 60,190 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. இதன் சராசரி கல்வியறிவு விகிதம் 95.10 சதவீதமாகும். [1] சுமார் 64 சதவீத மக்கள் இந்து மதத்தையும், 32 சதவீதம் இஸ்லாம், 4 சதவீத கிறித்துவத்தையும் பின்பற்றுகிறார்கள். அட்டவணை சாதி (எஸ்.சி.) 7.8 சதவீதமாகவும், கொடுங்கல்லூரில் மொத்த மக்கள் தொகையில் 0.1 சதவீதமாகவும் ஆகவும் உள்ளது. [2]
திரிச்சூர் மாவட்டத்திலுள்ள கொடுங்கல்லூர் வட்டத்தின் தலைமையகம் கொடுங்கல்லூர் ஆகும். [2] கொடுங்கல்லூர் சட்டமன்றத் தொகுதி, சாலக்குடி மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். [3] சாலை வலைப்பின்னல் மூலம் கேரளாவின் பிற நகரங்களுடன் கொடுங்கல்லூர் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆலுவா இரயில் நிலையம் (28 கி.மீ) என்பது கொடுங்கல்லூருக்கு அருகிலுள்ள முக்கிய ரயில் நிலையமாகும்.
கோட்டப்புரம் கோட்டை / திப்பு கோட்டை என்று உள்நாட்டில் அழைக்கப்படும் கோட்டை கிரங்கனூர் (ஃபோர்டாலெசா சாவோ டோமே) 1523-ஆம் ஆண்டில் போர்த்துகீசியர்களால் கொடுங்கல்லூரில் கட்டப்பட்டது. இந்த கோட்டை 1565-இல் விரிவுபடுத்தப்பட்டது. மேலும் 1663-இல் இது டச்சுக்காரர்களின் கைகளில் சென்றது. [4] சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருவஞ்சிக்குளம் மகாதேவர் கோயில் தென்னிந்தியாவின் முக்கிய சிவன் கோயில்களில் ஒன்றாகும். திருவஞ்சிக்குளம் கோயிலில் உள்ள சிவன் கேரளாவின் சேர பெருமாள்களின் புரவலர் தெய்வமாக இருந்தார். மேலும் கொச்சின் அரச குடும்பத்தின் குடும்ப தெய்வமாக இருந்து வருகிறார்.
'கொடுங்கல்லூர்' என்ற நவீன பெயரின் தோற்றம் பல விளக்கங்களைக் கொண்டுள்ளது:
இடைக்காலத்தில் (கி.பி. 9-ஆம் நூற்றாண்டிலிருந்து), கொடுங்கல்லூர் மகோதாயபுரம் என்றழைக்கப்பட்ட வஞ்சி நகரத்தின் ஒரு பகுதியாக இருந்தது (சமஸ்கிருதம்: மகோதயபுரா, மலையாளம்: மகோதய புரம்). இது சுமார் முந்நூறு ஆண்டுகளாக சேர குல பெருமாள்களின் கேரள கிளையின் ஆட்சிப்பகுதியாகும். [5] கொடுங்கல்லூர் பண்டைய காலங்களில் வர்த்தகம் காரணமாகவும், பகவதி சேத்திரமாகவும், கண்ணகி தங்கிய சேத்திரமாகவும் நன்கு அறியப்பட்டது. பாண்டிய அரசியின் காற்கொலுசினை தனது கணவன் கோவலன் திருடியதாக பாண்டிய மன்னனால் பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்டதனால் கோபமுற்ற கண்ணகி பாண்டியனின் தலைநகரான மதுரையை எரித்தபின் இங்கு வந்து தங்கியதாக கேரளத்திலும் தமிழ்நாட்டிலும் நாட்டுப்புறக் கதைகள் கூறுகின்றன. இது இங்கு நடைபெறும் கோவில் திருவிழாக்களில் தெளிவாகத் தெரிகிறது. மேலும் பாண்டிய ஆட்சியாளர் பின்பற்றத் தவறிய தருமத்தின் வேர்களைக் கொண்டுள்ளது. மேலும் தூய்மையான கண்ணகியின் கோபத்தை வெளிப்படுத்துகிறது. இது சேர மன்னர் செங்கொட்டுவனின் சகோதரரும், அரச குடும்பத்தில் பிறந்தவரும் பின்னர் துறவியானவுருமான இளங்கோ அடிகள் என்பவரால் எழுதப்பட்ட பாரம்பரிய தமிழ் காவியமான சிலப்பதிகாரத்தின் கதையாகும். இது முசிறி பட்டணம், முயிரிக்கோடு, மகாவஞ்சிமன பட்டணம், திரிகுலசேகரபுரம் என்றும் அழைக்கப்பட்டது.
கொடுங்கல்லூர் ஜங்லி, ஜிங்கலே, சிங்கிலின், சைங்காலி, சிங்க்லி, சின்காலி, சென்கலா, சைங்காலி என்றும் அழைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பெரியாறின் துணை நதியான சங்கலா நதி அல்லது சங்கிலி நதி (அதாவது சமசுகிருதத்தில் சிரிங்கலா ) என்றப் பெயரிலிருந்து பெறப்பட்டவையாகும். [6]
பெரியாற்றின் வாயில் அமைந்துள்ள பழங்கால துறைமுகமான முசிரிஸ் நவீனகால கொடுங்கல்லூருடன் ஒத்துப்போகிறது என்று அறிஞர்கள் நம்புகின்றனர். ஆரம்பகால வரலாற்று தென்னிந்தியாவின் மத்திய கேரளா, மேற்குத் தமிழ்நாடு ஆகிய பகுதிகள் சேர ஆட்சியாளர்களால் ஆட்சி செய்யப்பட்டன.
இந்த துறைமுகத்தை உலகம் முழுவதிலுமிருந்து, குறிப்பாக மத்திய தரைக்கடல் பகுதியிலிருந்து வந்தவர்கள் பார்வையிட்டுள்ளனர். உரோமானியப் பேரரசு இந்தியாவின் மேற்கு கடற்கரையுடன் தொடர்ச்சியான வர்த்தக தொடர்பைக் கொண்டிருந்தது. மசாலாப் பொருட்களுடன் (மிளகு), முத்து, மஸ்லின் துணி, தந்தம், வைரங்கள், பட்டு, வாசனை திரவியங்கள் போன்ற பொருட்கள் மத்திய கேரளாவைச் சேர்ந்த மாலுமிகளால் வாங்கப்பட்டன. [7]
கேரளாவில் உள்ள பண்டைய கிறிஸ்தவர்களிடையே ஒரு பாரம்பரிய நம்பிக்கை என்னவென்றால், அப்போஸ்தலர் புனித தோமையர் பொ.ச. 1-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கொடுங்கல்லூரில் அல்லது அதைச் சுற்றி வந்து ஏழு தேவாலயங்களை நிறுவினார். கொடுங்கல்லூர், நிரணம், நிலைக்கல், கொக்கமங்கலம், கோட்டக்காவு, பாலையூர் திருவிதாங்கோடு அரப்பள்ளி - ஒரு தேவாலயம். [8] [9] [10]
4 மற்றும் 8-ஆம் நூற்றாண்டுகளுக்கிடையில், கானாவின் சிரிய வணிகர் தோமையர் தலைமையில் மத்திய கிழக்கிலிருந்து ஞானையா சமூகம் வந்ததாக நம்பப்படுகிறது. இச்சமூகம் கிரங்கனூரின் தெற்குப் பகுதியில் குடியேறியது. இறுதியில் புனித தோமையர், புனித குரியகோஸ் மற்றும் புனித மரி என்ற பெயர்களில் மூன்று தேவாலயங்களை நிறுவியது. 16-ஆம் நூற்றாண்டில் கொச்சி இராச்சியத்திற்கும் கோழிக்கோட்டின் சாமோரினுக்கும் இடையிலான போரின்போது அதன் அழிவுக்குப் பின்னர் ஞானையா தங்கள் குடியேற்றத்தை விட்டு வெளியேறினார். [11]
ஒரு பாரம்பரியத்தின்படி, பொ.ச.மு. 6-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் நிறுவப்பட்ட மலபார் கடற்கரையில் ஒரு கொச்சி யூத காலனி, அப்போஸ்தலரை இந்த பிராந்தியத்திற்கு ஈர்த்தது. கொடுங்கல்லூரில் உள்ள சேரமான் மசூதி, "பொ.ச. 629-இல் மாலிக் பின் தினரால் கட்டப்பட்டது" என்றும், இது தெற்காசியாவின் மிகப் பழமையான மசூதி என்றும் பூர்வீக முஸ்லீம் பாரம்பரியம் கூறுகிறது. [12] [13]
கொடுங்கல்லூர் துறைமுகத்தின் பொருளாதார, அரசியல் கௌரவம் இடைக்கால தென்னிந்தியாவில் கூட இருந்தது. இந்த காலகட்டத்தில் இந்தியாவுக்கு மேற்கு ஆசிய பார்வையாளரான சுலைமான் இப்பகுதியின் "பொருளாதார செழிப்பை" பதிவு செய்துள்ளார். மேலும், அவர் நகரத்தில் உள்ள சீன வர்த்தகர்களை விவரிக்கிறார்; அவை மசாலா (மிளகு மற்றும் இலவங்கப்பட்டை ), தந்தம், முத்து, பருத்தி துணிகள், தேக்கு மரம் போன்ற பொருட்களை வாங்குவதாக விவரிக்கப்படுகின்றன.
11-ஆம் நூற்றாண்டில் அண்டை நாடான சோழநாட்டு ஆட்சியாளர்களால் இந்த துறைமுகம் அகற்றப்பட்டது. [5]
டச்சு ஆட்சிக்காலத்தில் க்ரங்ஙணூர் என்றாளப் பட்டது.
இந்த ஊர் கைப்பமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கும், சாலக்குடி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[14].
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.