கொங்கு வேளாளர்
தென்னிந்தியாவின் கொங்கு பகுதியைச் சேர்ந்த தமிழ் சமூகம் / From Wikipedia, the free encyclopedia
கொங்கு வேளாளர் (Kongu Vellalar) எனப்படுவோர் தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் வசிக்கும் தமிழைத் தாய் மொழியாக கொண்ட ஓர் இனக்குழுவினர் ஆவர். பொதுவாக இவர்களை கவுண்டர் என்றும் கொங்கு சமுதாயம் என்றும் அழைப்பர்.[2] கொங்கு நாட்டுப் பகுதிகளில் பெருமளவில் உள்ள இவர்கள் முற்படுத்தப்பட்ட வகுப்பினராய் இருந்து, 1975இல் தங்களின் கோரிக்கைக்கேற்ப பிற்படுத்தப்பட்டவர்களாய் அறிவிக்கப்பட்டார்கள்.[3] கவுண்டர் என்ற சொல்லுக்கு நிலத்தை, மக்களை, நாட்டை காப்பவன் என்பது பொருளென்று புலவர் ராசு கூறுகின்றார் .[4]
கொங்கு வேளாளர் | |
---|---|
வகைப்பாடு | பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் |
மதங்கள் | இந்து |
மொழிகள் | தமிழ் (கொங்குத் தமிழ்) |
நாடு | இந்தியா |
மூல மாநிலம் | தமிழ்நாடு |
மக்கள்தொகை கொண்ட மாநிலங்கள் | தமிழ்நாடு[1] |
பகுதி | கொங்கு நாடு |
கவுண்டர்கள் இன்று பெருமளவு உழவிலும், தொழிற்துறையிலும் ஈடுபட்டு வருவதோடு தமிழக அரசியலிலும் முதன்மைப் பங்கு வகிக்கின்றனர். இவர்கள் திண்டுக்கல், கோயம்புத்தூர், தருமபுரி, ஈரோடு, கரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி, சேலம், நாமக்கல், திருப்பூர் ஆகிய மேற்கு மாவட்டங்களில் பரவலாக வாழ்ந்து வருகின்றனர்.[5]