குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்
கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில் / From Wikipedia, the free encyclopedia
குருவாயூர் கோவில் என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் என்னும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் ஆகும். பக்தர்களால், இந்துக்களின் முக்கிய வழிபாட்டுத் தலமாகவும் பூலோக வைகுண்டமாகவும் (புவியில் இறைவன் விஷ்ணு வாசம் செய்யும் தலம்) அறியப்படும் திருத்தலம்.[2]
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
குருவாயூர் குருவாயூரப்பன் கோயில் | |
---|---|
அமைவிடம் | |
அமைவு: | குருவாயூர், கேரளா |
ஏற்றம்: | 22.64 m (74 அடி) |
ஆள்கூறுகள்: | 10.5945°N 76.0394°E / 10.5945; 76.0394 |
கோயில் தகவல்கள் | |
மூலவர்: | கிருஷ்ணன் (விஷ்ணுவின் ரூபத்தில்) |
கட்டிடக்கலையும் பண்பாடும் | |
கட்டடக்கலை வடிவமைப்பு: | மரபுவழிக் கேரளப் பாணி |
வரலாறு | |
கட்டப்பட்ட நாள்: | கோயில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகப் பதிவுகள் காட்டுகின்றன. கோயிற் சிலை 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கருதப்படுகின்றது.[1] |
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்திற்கு சற்று முன் அன்னை தேவகி மற்றும் தந்தையார் வாசுதேவருக்கு குருவாயூர் கோயிலில் உள்ளவாறே தோற்றமளித்தார்; இதனால் இந்த இடம் தென் இந்தியாவின் துவாரகா என்றும் அறியப்படுகிறது. இங்கு குடிகொண்டிருக்கும் சிறுவனான ஸ்ரீ கிருஷ்ணனை, பக்தர்கள் அன்புடன் கண்ணன், உண்ணிக் கண்ணன், (குழந்தை கிருஷ்ணன்) உண்ணிக்கிருஷ்ணன், பாலகிருஷ்ணன், மற்றும் குருவாயூரப்பன் என்று பல பெயர்களில் வணங்குவது வழக்கம.
108 திவ்ய தேசக் கோவில்களில் ஒன்றல்ல எனினும் வைணவர்களால் மிகவும் புனிதமானதாக போற்றப்பட்டு வரும் திருக்கோயில்.