கு. அழகிரிசாமி
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
கு. அழகிரிசாமி (Ku. Alagirisami) (செப்டம்பர் 23, 1923 - சூலை 5, 1970)[1] குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர். 20-ஆம் நூற்றாண்டின் சிறந்த சிறுகதை எழுத்தாளராகத் திகழ்ந்த அழகிரிசாமி, சிறுகதை, கட்டுரை, புதினங்கள், நாடகங்கள், மேடை நாடகங்கள், கவிதைகள், கீர்த்தனைகள், மொழிபெயர்ப்புகள் என்று பல துறைகளில் சாதனை புரிந்துள்ளார்.[2]
விரைவான உண்மைகள் கு. அழகிரிசாமிKu. Azhagirisamy, பிறப்பு ...
கு. அழகிரிசாமி Ku. Azhagirisamy | |
---|---|
பிறப்பு | அழகிரிசாமி (1923-09-23)23 செப்டம்பர் 1923 இடைச்செவல், கோவில்பட்டி, தமிழ்நாடு |
இறப்பு | 5 சூலை 1970(1970-07-05) (அகவை 46) |
பணி | பத்திரிகையாளர், கவிஞர் |
மூடு
இவர் எழுத்தாளர் கி. ராஜநாராயணின் இளமைக் கால நண்பர்.[3] தமிழ் நேசன் (மலேசியா), சக்தி, சோவியத் நாடு, பிரசண்ட விகடன் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றினார்.[4][5] இலக்கிய உலகில் இவரது சிறுகதைகள் புகழ்பெற்றவை.[6] 1970 இல், இவரது அன்பளிப்பு என்னும் சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது..[7]