கி. ராஜநாராயணன்
சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் / From Wikipedia, the free encyclopedia
கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் (16 செப்டம்பர் 1922 – 17 மே 2021),[3][4] கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். கி.ரா என்கிற கி.ராஜநாராயணனின் முழுப்பெயர், ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜ நாயக்கர். கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், மாயமான், நாட்டுப்புற கதை களஞ்சியம் ஆகியவை இவரது பிரபலமான படைப்புகளில் சில. இவர் 1991 இல் சாகித்ய அகாதமி விருதைப் பெற்றவர். டைம்ஸ் ஆஃப் இந்தியா இவரை "தமிழ் வாய்மொழி பாரம்பரியத்தின் காவலர்" என்று அழைத்தது.[5]
விரைவான உண்மைகள் கி. ராஜநாராயணன், பிறப்பு ...
கி. ராஜநாராயணன் | |
---|---|
![]() கி. ராஜநாராயணன் | |
பிறப்பு | ராயங்கல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயண பெருமாள்[1] 16 செப்டம்பர் 1923 இடைசெவல், பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டம், மதராசு தலைமாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 17 மே 2021(2021-05-17) (அகவை 97)[2] லாஸ்பேட்டை, புதுச்சேரி, இந்தியா |
புனைபெயர் | கி. ரா |
குடியுரிமை | இந்தியர் |
காலம் | 1958– 2021 |
வகை | சிறுகதை, புதினம் |
கருப்பொருள் | நாட்டுப்புறவியல், கிராமிய வாழ்க்கை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | கோபல்ல கிராமம், கோபல்லபுரத்து மக்கள், நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (1991) |
துணைவர் | கணவதி அம்மாள் (தி. 1954; இற. 2019) |
பிள்ளைகள் |
|
இணையதளம் | |
https://www.kirajanarayanan.com/ |
மூடு