கித்புகா
From Wikipedia, the free encyclopedia
கித்புகா என்பவர் ஒரு மங்கோலியத் தளபதி ஆவார். இவர் நைமர் பழங்குடியினத்தை[1] சேர்ந்த ஒரு நெசுத்தோரியக் கிறித்தவர் ஆவார். இவர் மங்கோலிய ஈல்கான் குலாகுவின் படைத் துணைத் தலைவராகவும் நம்பிக்கைகுரியவராகவும் இருந்தார். மத்திய கிழக்குப் படையெடுப்பில் குலாகுவிற்கு உதவி புரிந்தார். மங்கோலியாவில் அடுத்த ககானைத் தேர்ந்தெடுக்கும் குறுல்த்தாய்க்குக் குலாகு தன் பெரும்பாலான வீரர்களைக் கூட்டிச் சென்றபோது, சிரியாவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொறுப்புக் கித்புகாவிடம் கொடுக்கப்பட்டது. தெற்கே எகிப்தை நோக்கிய மங்கோலிய ஊடுருவல் தாக்குதல்களுக்கு இவர் காரணமாக இருந்தார். இவர் 1260ஆம் ஆண்டு ஐன் ஜலுட் யுத்தத்தில் கொல்லப்பட்டார்.