கார்த்திக் சிவகுமார்
இந்திய நடிகர் / From Wikipedia, the free encyclopedia
கார்த்தி என்று அழைக்கப்படும் கார்த்திக் சிவகுமார் (25 மே 1977) என்பவர் தமிழ்நாட்டுத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் 2004 ஆம் ஆண்டு முதல் பருத்தி வீரன் (2007), ஆயிரத்தில் ஒருவன் (2010), மெட்ராஸ் (2014) போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரானார். இவரின் நடிப்புத்திறனால் மூன்று தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், எடிசன் விருதுகள், தமிழக அரசு திரைப்பட விருதுகள் போன்றவை வென்றுள்ளார்.மேலும் மணிரத்னம் இயக்கத்தில் வரலாற்றுக் காவியமான பாென்னியின் செல்வன் திரைப்படத்தில் "வந்தியத்தேவன்" கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விரைவான உண்மைகள் கார்த்தி சிவகுமார், பிறப்பு ...
கார்த்தி சிவகுமார் | |
---|---|
பிறப்பு | கார்த்திக் சிவகுமார் 25 மே 1977 (1977-05-25) (அகவை 47)[1] சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2007-இன்று வரை |
பெற்றோர் | சிவகுமார் , லட்சுமி |
வாழ்க்கைத் துணை | ரஞ்சனி (தி. 2011) |
பிள்ளைகள் | உமையாள், கந்தன் [2] |
உறவினர்கள் | சூர்யா (அண்ணன்) ஜோதிகா (அண்ணி) பிருந்தா சிவக்குமார் (தங்கச்சி) |
மூடு