காம்பிலி இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
காம்பிலி இராச்சியம் ( Kampili kingdom) இந்தியாவின் தக்காண பீடபூமியில் தற்கால கர்நாடகா மாநிலத்தின் துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்திருந்தது. இவ்விராச்சியம் 14ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தக்காண பீடபூமியில் குறுகியகாலமே ஆட்சி செலுத்தியது. [1][2] கர்நாடகா மாநிலத்தின் வடகிழக்கில், மகாராட்டிரா மாநில எல்லையில், துங்கபத்திரை ஆற்றின் கரையில் அமைந்த குல்பர்கா பகுதிகளை ஆண்டது. [2]
1327/1328களில் தில்லி சுல்தானகத்துப் படையெடுப்புகளால், காம்பிலி இராச்சியம் மறைந்தது. [3][4]காம்பிலி இராச்சியத்தின் அழிவால், தக்காணத்தில் இந்து சமய விசயநகரப் பேரரசு உருவாக காரணமாயிற்று.[5]