அம்பி (கர்நாடகம்)
கர்நாடகாவில் உள்ள ஒரு ஊர். / From Wikipedia, the free encyclopedia
அம்பி (Hampi, ஹம்பி) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெல்லாரி மாவட்டத்தில் பாயும் துங்கபத்திரை ஆற்றங்கரையில் உள்ள ஒரு ஊர் மற்றும் உலகப் பாரம்பரியக் களம் ஆகும். விஜயநகரப் பேரரசின் தலைநகரமாக விளங்கிய போது இதன் பெயர் விஜயநகரம் ஆகும். ஹம்பி, விசயநகரப் பேரரசின் தலைநகரமான விசயநகரத்தின் அழிபாடுகளிடையே அமைந்துள்ளது. விசயநகரத்துக்கும் முந்திய காலப்பகுதியைச் சேர்ந்ததாக இருக்கக்கூடிய இவ்வூர் இன்றும் ஒரு முக்கியமான சமயச் சிறப்புவாய்ந்த இடமாகத் தொடர்ந்து வருகிறது. புகழ்பெற்ற விருபாட்சர் கோயில் இவ்விடத்தில் உள்ளது. ஹம்பி, விசயநகரத்தோடு தொடர்புடைய மேலும் பல நினைவுச் சின்னங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.[2] இவ்வூர் பழைய நகரத்தின் வீதிகளிலும் விரிவடைந்து உள்ளது.
ஹம்பி
ಹಂಪೆ ஹம்பெ | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): விசயநகர சாம்ராச்சியம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
மாவட்டம் | பெல்லாரி |
தோற்றுவித்தவர் | ஹரிஹரர், புக்கராயர் |
ஏற்றம் | 467 m (1,532 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 2,777[1] |
மொழிகள் | |
• Official | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
அருகமைந்துள்ள நகரம் | ஹோஸ்பேட் |
இணையதளம் | www |
ஹம்பியில் உள்ள நினைவுச் சின்னங்களின் தொகுதி | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | பண்பாடு |
ஒப்பளவு | (i)(iii)(iv) |
உசாத்துணை | 241 |
UNESCO region | ஆசியா-பசிபிக் |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 1986 (10-ஆவது, 15-ஆவது தொடர்) |
ஆபத்தான நிலை | 1999–2006 |
2014-ஆம் ஆண்டுக் கணக்கீட்டின்படி அதிகப்படியாக கூகுளில் தேடப்பட்ட கர்நாடக வரலாற்றுச் சிறப்புடைய இடங்களுள் முதலாவதாக ஹம்பி உள்ளது.[3] விசயநகரப் பேரரசின் படையில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் வீரர்கள் இருந்துள்ளனர். பொ.ஊ. 1500-இல் விசயநகரப் பேரரசில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 5,00,000 ஆக இருந்ததாகச் சொல்லப்படுகிறது (இது பொ.ஊ. 1440-1540 காலத்திய உலக மக்கட்தொகையில் 0.1% ஆகும்). இதனால் அன்றைய காலத்தில் இந்நகரம் மக்கட்தொகையளவில் பீஜிங்குக்கு அடுத்தபடியானதும் பாரிசைப் போல மூன்று மடங்கானதானதும் ஆகும்.[4]
விசயநகரத்தின் நினைவுச் சின்னங்கள், ஹம்பி நினைவுச் சின்னங்களின் தொகுதி என்ற பெயரில் யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[5]