![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/69/Concorde.planview.arp.jpg/640px-Concorde.planview.arp.jpg&w=640&q=50)
கான்கோர்டு
From Wikipedia, the free encyclopedia
கான்கோர்டு (Concorde) வானூர்தி சுழல் தாரைப் பொறி கொண்ட, ஒலியை விட வேகமாகச் செல்லும் பயணிகள் வானூர்தியாகும். இவ்வானூர்தி இங்கிலாந்து, பிரான்சு ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒப்பந்தப்படி இருநாட்டு வானூர்தி அமைப்பகங்களாலும் தயாரிக்கப்பட்டது. இவ்வானூர்தி முதன் முறையாக 1969-ல் பறக்கவிடப்பட்டது. 1976-ஆம் ஆண்டு பயணிகள் வானூர்தி சேவைக்குக் கொண்டுவரப்பட்டது. அதிலிருந்து 27 ஆண்டுகள் தொடர்ந்து பயன்பாட்டில் இருந்தது.
கான்கோர்டு | |
---|---|
![]() | |
வகை | மீயொலிவேகப் பயணிகள் வானூர்தி |
உற்பத்தியாளர் | பிரித்தானிய வானூர்தி நிறுவனம் (பிஏசி, தற்போது பிஏஈ சிஸ்டெம்ஸ்) ஏரோஸ்பேஷியேல் (தற்போது ஈஏடிஎஸ்) |
முதல் பயணம் | மார்ச் 2, 1969 |
அறிமுகம் | சனவரி 21, 1976 |
நிறுத்தம் | நவம்பர் 23, 2003 |
தற்போதைய நிலை | பயன்பாட்டில் இல்லை |
முக்கிய பயன்பாட்டாளர்கள் | பிரித்தானிய ஏர்வேஸ் ஏர் பிரான்ஸ் பிரானிஃப் இண்டர்நேஷனல் ஏர்வேஸ் சிங்கப்பூர் வான்வழி |
தயாரிப்பு எண்ணிக்கை | 20 [1][2] |
அலகு செலவு | £23 மில்லியன் (1977) |
இவ்வானூர்தி இலண்டன் ஹீத்ரோ (பிரித்தானிய ஏர்வேஸ்) வானூர்தி தளத்திலிருந்தும் பாரிஸ் சார்லசு தே கால் (ஏர் பிரான்ஸ்) வானூர்தி தளத்திலிருந்தும் அமெரிக்காவின் நியூ யார்க், வாசிங்டன், டி. சி. நகரங்களுக்கு இடையே தினமும் சென்று வந்து கொண்டிருந்தது. இதன் பயணநேரம் மற்ற வானூர்திகளின் பயண நேரத்தில் பாதி மட்டுமே ஆகும்.
மொத்தம் 20 கான்கோர்டு வானூர்திகள் மட்டுமே தயாரிக்கப்பட்டன. ஆதலால் இத்திட்டம் இருநாடுகளுக்கும் பெருத்த நட்டத்தை விளைவித்தது. மேலும் இருநாட்டு வானூர்தி நிறுவனங்களும் வானூர்திகளை வாங்க அரசாங்கமே நிதியுதவி அளித்தது. சூலை 25, 2000, அன்று நடைபெற்ற விபத்தின் காரணமாகவும் மற்றும் சில காரணங்களுக்காகவும் கான்கோர்டு பயணிகள் போக்குவரத்து 26-நவம்பர்-2003 உடன் நிறுத்தப்பட்டது.
கான்கோர்டு எனும் பெயரே இரு நாடுகளுக்கும் இடையே இருந்த வானூர்தி உருவாக்க உடன்படிக்கையைக் காட்டுகிறது. பிரித்தானியாவில் வழக்கமான வடிவமைப்பில் அல்லாத அனைத்து வானூர்திகளும் "கான்கோர்டு" என்றே அழைக்கப்படும். வான்வழிப் போக்குவரத்தில் ஒரு மைல் கல்லாகவும் முதன்மையான சின்னமாகவும் இவ்வானூர்தி கருதப்படுகிறது.