கல்லாறு
From Wikipedia, the free encyclopedia
கல்லாறு பெரம்பலூர் மாவட்டத்தில் ஓடும் ஒரு சிறு ஆறாகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் ஒன்றான பச்சைமலையில் உற்பத்தியாகி, சுவேதா ஆற்றில் கலக்கிறது.[1] பெரிய ஏரிகளில் ஒன்றான வெங்கலம் பகுதியில் உள்ள ஏரியில் கலந்து அங்கிருந்து கிழக்கு திசை நோக்கி பாய்ந்து, கொல்லிமலையில் உற்பத்தியாகிவரும் சுவேதா ஆற்றில் சேர்கிறது. கல்லாற்றின் நீளம் சுமார் 20 கிலோமீட்டர். வருடத்தின் ஆறுமாதங்களுக்கும் அதிகமாக பாயும் இந்த நதியின் மூலம் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமாக ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. மேலும் 15-க்கு மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்கு இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது கல்லாறு.