![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b3/Hanashiro_Chomo.jpg/640px-Hanashiro_Chomo.jpg&w=640&q=50)
கராத்தே
தற்காப்புக்கலை / From Wikipedia, the free encyclopedia
கராத்தே என்பது, சண்டைக்குரிய அல்லது தற்காப்புக்கான ஒரு கலையாகும். இது ஜப்பானியத் தீவுக் கூட்டங்களில் ஒன்றான ரியூக்யுத் தீவுக்கு உரிய சண்டை முறைகளும், சீனாவின் கென்போ என்னும் சண்டை முறையும் கலந்து உருவானது. முதன்மையாக இது ஒரு தாக்குதல் கலையாகும். குத்துதல், உதைத்தல், முழங்கால் மற்றும் முழங்கைத் தாக்குதல்கள், திறந்த கை உத்திகள் என்பன இக் கலையில் பயன்படுகின்றன. இறுகப் பிடித்தல், பூட்டுப் போடுதல், கட்டுப்படுத்துதல், எறிதல், முக்கியமான இடங்களில் தாக்குதல் என்பனவும் சில கராத்தேப் பாணிகளில் பயிற்றுவிக்கப்ப்படுகின்றன.vHh
![]() | |
---|---|
![]() ஹனாஷிரோ சோமோ | |
வேறு பெயர் | கராத்தே-டூ (空手道) |
நோக்கம் | தாக்குதல் |
கடினத்தன்மை | முழுமையான தொடுகை |
தோன்றிய நாடு | ![]() |
உருவாக்கியவர் | காங்கா சக்குக்காவா; சோக்கோன் மட்சுமூரா; ஆங்கோ இட்டோசு; கிச்சின் புனாக்கோஷி |
Parenthood | சீன சண்டைக் கலைகள், ரியூக்யுத் தீவுகளின் சண்டைக்கலைகளான நாகா-டே, ஷூரி-டே, தேமாரி-டே என்பவை. |
ஒலிம்பிய விளையாட்டு | இல்லை |
ச்சின் என்னும் வகுப்பைச் சேர்ந்தோரிடையே இது தோன்றிய இது "டி" ("ti") அல்லது "டெ" ("te") என்னும் பெயரால் அழைக்கப்பட்டு வந்தது. 1372ல், சுசான் மன்னர் சாட்டோவினால், மிங் வம்சத்துச் சீனாவுடன் வணிகத் தொடர்புகள் உருவாக்கப்பட்டபோது, சீனாவிலிருந்து வந்தவர்கள் மூலம் பலவகையான சீனத்துச் சண்டைக் கலைகள் ரியூக்யுத் தீவுகளுக்கு அறிமுகமானது. சிறப்பாக இவை சீனாவின் புஜியன் மாகாணத்திலிருந்தே வந்தன.[3][4] 1392 ஆம் ஆண்டில், 36 சீனக் குடும்பங்கள், பண்பாட்டுப் பரிமாற்றம், சீனச் சண்டைக் கலை பற்றிய அறிவைப் பகிர்ந்து கொள்ளல் போன்ற காரணங்களுக்காக ஒக்கினாவாவுக்கு வந்தனர். 1429ல் ஷோகினாவா மன்னர் காலத்தில் ஒக்கினாவாவில் ஏற்பட்ட அரசியல் மையப்படுத்தல், 1609 ஆம் ஆண்டில், ஒக்கினாவா ஷிம்சு இனக்குழுவினரால் ஆக்கிரமிக்கப்பட்ட பின்னர் ஆயுதங்கள் தடை செய்யப்பட்டமை போன்ற நிகழ்வுகளும் ஆயுதங்கள் இல்லாத சண்டை முறைகள் வளர்ச்சியடைவதற்குக் காரணமாயின. 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி, 2020 கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் சேர்ப்பதற்காக அடிபந்தாட்டம், மென்பந்தாட்டம், சறுக்குப் பலகை, நீர்ச்சறுக்கு மற்றும் விளையாட்டு மலையேற்றம் ஏற்றம் ஆகியவற்றோடு சேர்த்து பட்டியலிடப்பட்டிருந்தது. 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒன்றாம் தேதி சர்வதேச ஒலிம்பிக் கமிஷனின் நிறைவேற்றுக் குழு 2020 ஒலிம்பிக் போட்டியில் மேற்கண்ட ஐந்து விளையாட்டுக்களையும் (அடிபந்தாட்டம் மற்றும் மென்பந்தாட்டம் இரண்டையும் ஒரே ஒரு விளையாட்டாகக் கணக்கில் சேர்த்து) சேர்த்துக்கொள்வதை ஆதரிப்பதாக அறிவித்தது.
சப்பானிய வெளியுறவு அமைச்சகத்திக் ஆதரவில் செயல்பட்டு வரும் வெப் சப்பான் என்ற இணையதளம் உலகெங்கிலும் 50 மில்லியன் மக்கள் கராத்தே பயிற்சி பெறுவதாக கூறுகிறது.[5] 100 மில்லியன் மக்கள் கராத்தே பயிற்சி பெறுவதாக உலக கராத்தே சம்மேளனம் அறிவித்துள்ளது.[6]