ஓமந்தூர் ராமசாமி
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் | சுதந்திர இந்தியாவில் மதராஸ் மாகாணத்தின் முதல் முதலமைச்சர் / From Wikipedia, the free encyclopedia
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (Omandur Ramasamy Reddiyar) (1 பிப்ரவரி, 1895 - 25 ஆகத்து 1970) இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். சென்னை மாகாணம் மற்றும் சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.
விரைவான உண்மைகள் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சென்னை மாகாண முதல்வர் ...
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் | |
---|---|
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் | |
சென்னை மாகாண முதல்வர் | |
பதவியில் மார்ச் 23, 1947 – ஏப்ரல் 6, 1949 | |
பிரதமர் | ஜவஹர்லால் நேரு |
ஆளுநர் | சர் ஆர்ச்சிபல்டு எட்வர்டு நியி |
முன்னையவர் | த. பிரகாசம் |
பின்னவர் | குமாரசாமி ராஜா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1 பிப்ரவரி, 1895 ஓமந்தூர், தென் ஆற்காடு மாவட்டம், சென்னை மாகாணம் , இந்தியா |
இறப்பு | 25 ஆகத்து 1970 வடலூர் |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
வேலை | விவசாயி,ஆட்சியாளர் |
தொழில் | விவசாயி |
மூடு