![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/66/Plague_in_an_Ancient_City_LACMA_AC1997.10.1_%25281_of_2%2529.jpg/640px-Plague_in_an_Ancient_City_LACMA_AC1997.10.1_%25281_of_2%2529.jpg&w=640&q=50)
ஏதென்சில் கொள்ளைநோய்
கிமு 5 ஆம் நூற்றாண்டில் கிரேக்கத்தின் ஏதென்சில் ஏற்பட்ட தொற்றுநோய் / From Wikipedia, the free encyclopedia
ஏதென்சில் கொள்ளைநோய் (Plague of Athens, பண்டைக் கிரேக்கம்: Λοιμὸς τῶν Ἀθηνῶν , Loimos tôn Athênôn ) என்பது பெலோபொன்னேசியப் போரின் இரண்டாம் ஆண்டில் (கிமு 430) பண்டைய கிரேக்கத்தில் ஏதென்ஸ் நகர அரசை பேரழிவிற்கு உட்படுத்திய ஒரு கொள்ளைநோய் ஆகும். அப்போது ஏதென்சு வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. கொள்ளைநோயால் 75,000 முதல் 100,000 மக்கள் இறந்தனர். அது ஏதென்சு மக்கள்தொகையில் கால் பகுதியினராவர். இந்த நோய் தொற்று ஏதென்சு நகரின் துறைமுகமும் உணவு போன்ற அடிப்படை பொருட்களைக் கொண்டுவர ஒரே ஆதாரமான பிரேயஸ் துறைமுகம் வழியாக ஏதென்சுக்குள் நுழைந்ததாக நம்பப்படுகிறது.[1] கிழக்கு மத்தியதரைக் கடலின் பெரும்பகுதிகளில் நோய் குறைந்த தாக்கத்துடன் இருந்தாலும், இங்கு பெருமளவில் பரவியது.[2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/66/Plague_in_an_Ancient_City_LACMA_AC1997.10.1_%281_of_2%29.jpg/640px-Plague_in_an_Ancient_City_LACMA_AC1997.10.1_%281_of_2%29.jpg)
ஏதென்சின் சமூகத்தில் கொள்ளைநோய் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியது. இதன் விளைவாக சட்டம், சமய நம்பிக்கை போன்றவை பின்பற்றப்படாத நிலை உருவானது; பதிலுக்கு சட்டங்கள் கடுமையானதாக மாறியன. இதன் விளைவாக குடிமக்கள் அல்லாதவர்கள் ஏதெனியன் என்று கூறியதற்காக தண்டிக்கப்பட்டனர். கொள்ளை நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஏதென்சின் தலைவரான பெரிக்கிள்சும் இருந்தார்.[3] கிமு 429 மற்றும் கிமு 427/426 குளிர்காலத்தில் கொள்ளைநோய் இரண்டு முறை மீண்டும் வந்தது. சுமார் 30 நோய் உயிரிகள் கொள்ளை நோயை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.[4]