![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/20/S.L.Bhyrappa.jpg/640px-S.L.Bhyrappa.jpg&w=640&q=50)
எஸ். எல். பைரப்பா
From Wikipedia, the free encyclopedia
சாந்தேசிவரா லிங்கண்ணையா பைரப்பா (ஆங்கிலம்: Santeshivara Lingannaiah Bhyrappa ) (பிறப்பு 26 ஜூலை 1934) இவர் ஒரு கன்னட நாவலாசிரியர் ஆவார். இவரது படைப்புகள் இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்தில் பிரபலமாக உள்ளன. நவீன இந்தியாவின் பிரபல புதின ஆசிரியர்களில் ஒருவராக பைரப்பா பரவலாகக் கருதப்படுகிறார்.[1] அவரது புதினங்கள் கரு, கட்டமைப்பு மற்றும் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் தனித்துவமானது.[2] இவரது புத்தகங்கள் கன்னட மொழியில் அதிகம் விற்பனையாகிறது. அவர் எழுதிய புத்தகங்கள் இந்தி மற்றும் மராத்தி மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேலும் அதிகமாக விற்பனையும் ஆகிறது.[3] இவருக்கு 2010 இல் 20 வது சரஸ்வதி சம்மன் விருது வழங்கப்பட்டுள்ளது.[4]
எஸ். எல். பைரப்பா | |
---|---|
![]() | |
பிறப்பு | 20 ஆகத்து 1931 (அகவை 92) ஹாசன் மாவட்டம் |
படித்த இடங்கள் | |
பணி | எழுத்தாளர் |
பாணி | புனைகதை |
விருதுகள் | Sahitya Akademi Award in Kannada, இலக்கியம் மற்றும் கல்விக்கான பத்ம பூசன் |
பைரப்பாவின் படைப்புகள் ஓரளவுக்கு அவர் எழுதும் தலைப்புகளின் வரம்பு காரணமாக தற்கால கன்னட இலக்கியங்களான நவோதயா,நவ்யா, பண்டாயா, அல்லது தலிதா போன்ற எந்தவொரு குறிப்பிட்ட வகையிலும் பொருந்தாது. அவரது முக்கிய படைப்புகள் பல பொது விவாதங்கள் மற்றும் சர்ச்சைகளின் மையத்தில் உள்ளன. மார்ச் 2015 இல், பைரப்பாவுக்கு சாகித்ய அகாதமி பெல்லோஷிப் வழங்கப்பட்டது.[5] இந்திய அரசு அவருக்கு 2016 ல் பத்மஸ்ரீ விருது வழங்கியது.[6]